தாராபுரம், ஜூலை 8 - தாராபுரம் நகராட்சி பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் பூக்கடை முனை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்ட போது வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் கடை வியாபாரிகள் ஜே.சி.பி இயந்திரத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். தாராபுரம் நகராட்சி பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தாராபு ரம் கோட்ட செயற்பொறியாளர் கிருஷ் ணமூர்த்தி தலைமையில் கடந்த 6ஆம் தேதி முதல் தாராபுரம் நகரில் போக்கு வரத்துக்கு இடையூறாக உள்ள சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடை பெற்று வருகிறது. பூக்கடை முனை முதல் சுங்கம் வரை உள்ள ஆக்கிரமிப்பு கள் அகற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள தாராபுரம் பெரியகடைவீதி, பொள் ளாச்சி சாலை, தாலுக்கா அலுவலக சாலை, பூங்காசாலை, ஐந்துமுனை சந்திப்பு ஆகிய பகுதிகளில் ஆக்கிர மிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட் டது.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் முன்னறிவிப்பின்றி ஆக் கிரமிப்புகள் அகற்றுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சங்க தலைவர் ஞானசேகரன் தலைமையில் நகராட்சி 16 வார்டு உறுப்பினர் கமலக் கண்ணன் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட கடை உரிமையாளர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்ட ஜேசிபி இயந்திரத்தைத் தடுத்து நிறுத்தி, நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறி யாளர் பிரதீபிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கடந்த மூன்று நாட்களாக தாராபுரம் நகராட்சி கடை வீதி பகுதியில் ஆக்கிரமிப்புகளை முன் னறிவிப்பின்றி எடுத்து வருகிறீர்கள். ஆக்கிரமிப்புகளை அகற்ற யார் உத்த ரவு போட்டது? முன்னறிவிப்பின்றி திடீ ரென ஆக்கிரமிப்புகளை இடித்துத் தள்ளிவிட்டீர்கள். இதனால் ஒவ்வொரு கடை உரிமையாளர்களும் படிக்கட் டுகள் கட்டுவதற்கு சுமார் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம்வரை செலவாகும். இதை யார் பொறுப்பேற்றுக்கொள்வது எனக் கேட்டனர். இத்துடன் நிறுத்துங் கள் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மீண்டும் ஆக்கிரமிப்பு களை எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறி முற்றுகையிட்டனர். இதனைத்தொ டர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு எடுத் துக் கொள்கிறோம் என்று பணியைப் பாதியில் நிறுத்திவிட்டுச் சென்றுவிட்ட னர்.