districts

img

புரோக்கர் ஆதிக்கத்தில் வட்டாட்சியர் அலுவலகம் உடுமலையில் மார்க்சிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

உடுமலை, ஜூலை 20 - உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் அலு வலகத்தில் புரோக்கர் ஆதிக்கத்திற்கு முடிவு  கட்ட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோபாவேச ஆர்ப்பாட்டம் நடத் தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடு மலை ஒன்றியக் கமிட்டி சார்பில் வியாழ னன்று உடுமலை வட்டாட்சியர் அலுவலகம்  முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உடுமலை ஒன்றியச் செயலாளர் கி.கனகராஜ் தலைமை வகித்தார். இதில்  உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் புரோக்கர்கள் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட வும் பொது இ சேவை மையத்தில் அனைத்து  சான்றிதழ்களும் லஞ்சமின்றி வழங்குவது டன், கிராம ஊராட்சிகளில் கட்டப்பட்டுள்ள இ  சேவை மையங்களுக்கு இணைப்பு கொடுத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவும்,  நில அளவைப் பிரிவை முறையாக செயல் படுத்தி முறைகேடு இல்லாமல் அளந்து கொடுக்கவும். தேவனூர்புதூர் பாலாற்று புறம்போக்கில் ஆக்கிரமிப்பை அகற்றி வண்டிப் பாதையை மீட்டுத் தரவும், குரல் குட்டை தெற்குப் பள்ளத்தில் பன்றிக் குடி சைகள் அமைத்து ஆக்கிரமித்துள்ளதை அகற்றி பள்ளத்தையும், சுகாதாரத்தையும்  காப்பாற்றவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட் டச்செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட் டக்குழு உறுப்பினர் என்.சசிகலா,  ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஏ.பாலதண்டபாணி, ஏ. ராஜகோபால், எஸ்.ஜெகதீசன், ஆகியோர் கண்டன உரையாற்றினர்.   இதில் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பி னர்கள், கிளைச் செயலாளர்கள் மற்றும்  ஏரா ளமான பெண்கள் உள்பட 300க்கும் மேற்பட் டோர் பங்கேற்றனர். நிறைவாக கமிட்டி உறுப் பினர் ஆர்.குமரகுரு நன்றி கூறினார். அதன் பின் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக் கப்பட்டது.