districts

img

கல்வராயன் மலையில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

சேலம், டிச.26- கல்வராயன் மலை, சேர் வாய்ப்பட்டு கிராமத்தில் புதி தாக டாஸ்மாக் கடை திறப்ப தற்கு, எதிர்ப்பு தெரிவித்து மக் கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். சேலம் மாவட்டம், கல்வரா யன் மலை, வடக்குநாடு ஊராட் சிக்குட்பட்ட சேர்வாய்ப்பட்டு கிராமத்தில், பேருந்து நிறுத்தம் அருகே புதனன்று புதிதாக டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதுகுறித்த தகவ லறிந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கடையின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் - கள்ளக்குறிச்சி மாவட்டங் களை இணைக்கும் பிரதான சாலையில், பேருந்து நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், சேர் வாய்ப்பட்டு மட்டுமின்றி, மேல் வெள்ளாறு, கீழ் வெள்ளாறு, எறும்பூர் உள்ளிட்ட 7 கிரா மங்களைச் சேர்ந்த பெண்கள், பள்ளிக் குழந் தைகளுக்கு தொல்லைகள் ஏற்படலாம். இது மட்டுமின்றி, 5 கி.மீ. துாரத்தில் கருமந்துறை கிராமத்திலும், 3 கி.மீ. துாரத்தில் வெள்ளி மலையிலும் ஏற்கெனவே டாஸ்மாக் மதுபா னக் கடைகள் உள்ளன. எனவே, சேர்வாய்ப் பட்டு கிராமத்தில் திறக்கப்பட்டுள்ள புதிய டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த பெத்த நாயக்கன்பாளையம் வட்டாட்சியர் ஜெயக் குமார், வாழப்பாடி துணை காவல் கண்கா ணிப்பாளர் ஆனந்த் ஆகியோரிடம் பொது மக்கள் மனு அளித்தனர். அதனை பெற்றுக் கொண்ட அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத் திற்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தனர்.