districts

img

தனியார் இரும்பு உருக்காலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

திருப்பூர், ஜன.10- தாராபுரம் வட்டம் வடுகபாளையம் அருகே தனியார் இரும்பு ஆலைக்கு எதிராக ஏழு கிராமங்களைச் சேர்ந்த நூற் றுக்கும் மேற்பட்ட மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த வடுகபாளை யம் பகுதியில் ஸ்ரீ கௌரி ஸ்டீல்ஸ் என்ற தனியார் நிறுவ னத்தின் இரும்பு உருக்கு ஆலை அமைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. மாதத்திற்கு 10 ஆயிரம் டன் திறனுடன் இந்த ஆலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு கடந்த இரண்டு ஆண்டு காலமாக அப்பகுதியைச் சுற்றியுள்ள சங்கராண்டாம்பாளையம், சூரியநல்லூர், கண்ணாங்கோவில் உள்ளிட்ட ஏழுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற னர். இங்கு இரும்பு ஆலை அமையும் பட்சத்தில் காற்று மாசு பாடு, நீர் மாசுபாடு சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும். இதன் காரணமாக வேளாண்மையும், கால்நடை வளர்ப்பும்  மிக கடுமையாக பாதிக்கப்படும். எனவே, இங்கே இரும்பு ஆலை அமைக்க அரசு அனுமதிக்கக் கூடாது என மாநில அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் பல முறை மனுக் கொடுத்துள்ளனர். பல்வேறு கட்டமாக கிராம மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் தாராபுரம் வட்டாட்சி யர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் என அரசு அதிகாரிகளி டம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை.  இதனிடையே தனியார் இரும்பு ஆலை  அமைக்க அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்ற கோரிக் கையை வலியுறுத்தி மேற்படி கிராமத்தைச் சேர்ந்த நூற் றுக்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டு நுழைவாயில் பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த போராட்டம் தொடர்பாக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த மு.ஈசன் கூறுகையில், இந்த நிறுவனம் மக்கள் அதிகம் வசிக்கும் கிராமப்பகுதியில் அமைக்கப் படுகிறது. இந்த ஆலை அமைப்பதற்கு அரசு வழங்கிய அனு மதி ஆவணம், சுற்றுச்சூழல் தாக்கம் பற்றிய மாசு கட்டுப் பாட்டு வாரியம் வழங்கிய அனுமதி ஆவணம், விவசாய நிலங்களை தரிசு நிலம் என வகைப்படுத்தி வழங்கிய ஆவ ணங்கள் வேண்டும் என தொடர்ந்து இரண்டாண்டு காலமாக கோரிக்கை விடுத்தும் ஆலை நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அரசுத் துறையினரும் இதுவரை தரவில்லை.  எனவே அந்த ஆவணங்களைத் தரும் வரை காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்து ஆட்சி யர் அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.