உடுமலை, பிப்.7- உடுமலை மின் வட்ட மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கி ழமை கேங்மேன் தொழிலாளர்கள் பிரச்ச னைகள் தொடர்பாகவும், உடுமலை மின் வட்ட நிர்வாக அலுவலரின் தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகுமார் தலைமையில் சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு மற்றும் ஓய்வூ தியர் நல அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அமைப் பின் மாநிலச் செயலாளர் கோபாலகிருஷ் ணன் சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் ஜெகானந்தா, கோவிந்தன், பாலசுப்ரமணி யன் மற்றும் ஓய்வுபெற்றோர் நல அமைப் பின் தலைவர் பாலசுப்பிரமணியன் உட்பட தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் திர ளாகப் பங்கேற்றனர்.