திருப்பூர், ஜூலை 29 - உணவுச்சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கும் புலிகளை காக்க வேண்டும் என்று வனச்சரக அலுவலர் அறிவுறுத்தி உள்ளார். தமிழ்நாடு வனத்துறை ஆனை மலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனச் சரகமும், சிக்கண்ணா அரசு கலைக் கல் லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு 2 ம் இணைந்து உலக புலிகள் தினத்தை முன்னிட்டு சனியன்று திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் வித்தியாசமான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி னர். அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலையில் திருப் பூர் வனச் சரக அலுவலர் சுரேஷ்கி ருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். தெற்கு காவல் ஆய்வாளர் கணேசன் தலைமை தாங்கினார். வனசரக அலுவலர் பேசு கையில் தற்போது தமிழ்நாட்டில் சத்திய மங்கலம், முதுமலை, ஆனைமலை, களக்காடு முண்டந்துறை, மேகமலை ஆகிய ஐந்து புலிகள் காப்பகம் இருக் கின்றன.
புலிகள் அழியாமல் பாதுகாப்ப தற்காக தமிழ்நாடு வனத்துறை காப்ப கங்களை அமைத்து புலிகளை வேட்டை யாடுவதை தடுக்கவும், புலிகளின் எண் ணிக்கையை அதிகரிப்பதிலும் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. மேலும் உணவு சங்கிலியில் புலிக ளின் பங்கு மிகப்பெரியது, புலிகளை காப்பதால் புலிகள் மட்டுமல்ல ஒட்டு மொத்த சுற்றுச்சூழலையும், காடுகளின் பல்லுயிர் பெருக்கத்தையும் சமநி லைப்படுத்துகிறது. தற்போது புலிக ளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தா லும் வரலாற்று தரவுகளை ஒப்பீடு செய் யும்போது இவற்றின் எண்ணிக்கை குறைவு. ஆகையால் பொது மக்கள் புலி களை காக்க ஒத்துழைக்க வேண்டும். மாணவர்கள் ஒரு பகுதியில் மட்டு மல்லாமல் பல பகுதிகளுக்கு சென்று புலிகளை பற்றி எடுத்துக் கூறி அவற்றை பாதுகாக்க பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். மாணவச் செயலாளர்கள் காமராஜ், சுந்தரம், ராஜபிரபு, விஜய், செர்லின் முன்னாள் மாணவப் பிரதிநிதி பூபாலன் ஆகியோர் தலைமையில் அலகு-2 மாணவர்கள் புலிகளின் முககவசம் அணிந்தும், பிரமீட் ஏற்படுத்தியும், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் துண்டு பிரசுரம் கொடுத்தும் விழிப்பு ணர்வு ஏற்படுத்தினார்கள். பொதுமக்க ளுடன் இணைந்து புலிகளை வேட்டை யாடக் கூடாது, புலிகளை காப்போம் என்ற உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டனர்.