districts

img

சாலையோர வியாபாரிகளை பாதுகாத்திடுக

சேலம், அக்.28- சாலையோர வியாபாரிகளை ஆக்கி ரமிப்பு என வலுக்கட்டாயமாக அப்புறப் படுத்தும் போக்கினை தமிழக அரசு  கைவிட  வேண்டும் என சாலையோர வியாபாரிகள் சங்க மாநில ஒருங்கிணைப்பு குழு தீர்மானம்  நிறைவேற்றி உள்ளது.  தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்க மாநில ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்  சேலம் சிஐடியு மாவட்டக்குழு அலுவல கத்தில் எஸ்.செல்வி தலைமையில் நடை பெற்றது. இதில், சிஐடியு மாநில துணைத் தலைவர்  ஆர்.தெய்வராஜ், சாலையோர வியாபாரி கள் சங்கத்தின் மாநில கன்வீனர் பி.கருப் பையன், எஸ்.சந்தியாகு, பி.தனசேகரன், டி. விஜயலட்சுமி ஜெயசிலன் உள்ளிட்ட மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிஐடியு மாநில துணைத் தலைவர் டி.உதயகுமார், சிஐடியு மாவட்டச் செயலாளர் கோவிந்தன் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். முன்னதாக, சாலையோர வியாபாரி களை ஆக்கிரமிப்பு என்கிற பெயரில் வலுக் கட்டாயமாக அப்புறப்படுத்தும் போக்கை  கைவிட வேண்டும். கடலூர், சிதம்பரம்,  பெரம்பலூர், செங்கல்பட்டு, இராமேஸ்வரம்,  திருவண்ணாமலை, அவினாசி, பழனி, கோவை, சேலம் ஆகிய மாநகராட்சி மற்றும்  நகராட்சிகளில் சட்டத்திற்கு விரோதமாக சாலையோர வியாபாரிகளை அப்புறப் படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும். இராமநாதபுரம் மாவட்ட நகராட்சி, பேரூ ராட்சிகளில் உள்ள வார சந்தைகளை தனி யாருக்கு ஒப்பந்தம் விடுவதை ரத்து செய்ய  வேண்டும். நகராட்சி, பேரூராட்சி நிர்வா கங்களே நேரடியாக சந்தை வாடகை வசூல்  செய்திட வேண்டும். தொழில்முறை ரவுடி களை வைத்து சந்தை வியாபாரிகளை மிரட்டும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூ ராட்சிகளில் உள்ள சாலையோர வியா பாரிகளுக்கும் இலவச தள்ளுவண்டி வழங் கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.