districts

img

அரசு வழங்கிய பட்டாவை முறையாக பதிவு செய்துவழங்க கோரிக்கை

சேலம், மார்ச் 7- பட்டாவை முறையாக பதிவு செய்து வழங்கக்கோரி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பர பரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், டேனிஷ் பேட்டை, வரதக்கவுண்டனூர் பகு தியை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பொது மக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அவர்களை தடுத்தி நிறுத்திய காவல் துறையினர், 5 நபர் மட்டும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மனு வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பொது மக்கள் கூறுகையில், வரதகவுண்ட னூர் பகுதியில் 45 குடும்பங்களுக்கு அரசு பட்டா வழங்கியது. ஆனால், முறையாக பதிவு செய்யாமல் வழங்கி யதால், பயன்படுத்த முடியாத சூழ் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல சிரமங்கள் சந்தித்து வருவதாகவும், இதுகுறித்து காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தில் பலமுறை மனு அளித் தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. எனவே, எங்களுக்கு வழங்கிய பட்டாவை முறையாக பதிவு செய்து வழங்கினால் வீடுகட்டி வாழ்வ தற்கு பயனுள்ளதாக இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.