அவிநாசி, பிப்.13- அவிநாசி சுற்றுவட்டார கிராமங்களில் சேலத்தை சேர்ந்த கோவிந்தன் என்பவர் குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் வீதிகள் தோறும் சென்று இந் தியா கூட்டணிக்கு வாக்களிக் கும் படி பிரச்சாரத்தில் ஈடுபட் டுள்ளார். அவிநாசி ஒன்றியம் கரு வலூர் ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிக ளில் குடுகுடுப்பைக்காரர் வேடத் தில் சேலத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் பிரச் சாரம் செய்து வருகிறார். இப் பிரச்சாரத்தில் குடுகுடுப்பை அடித்துக் கொண்டு ஜக் கம்மா சொல்ற என்று மோடி பிரதமராக வந்தால் சிலிண் டர் விலை 2000 ரூபாய் உய ரும், இன்னொரு முறை பிர தமராக வந்தால் நாடு நாச மாய் போய்விடும் வீடு வீதிக்கு வந்திடும், மோடி பிர தமராகி வந்ததால் நீட் தேர்வு கொண்டு வந்து நமது வீட்டுப் பிள்ளைகள் டாக்டர் ஆவதை தடுத்துள்ளார். இளைஞர்களின் வேலை வாய்ப்பு கேள்விக்கு றியாகியது உட்பட பல் வேறு தகவல்களை மக்களி டம் கொண்டு சேர்த்தார். அவிநாசி சுற்றுவட் டார கிராமப் பகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டார்.