திருப்பூரில் தடை செய்யப்பட்ட 2.5 டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
திருப்பூர், மே 19- திருப்பூர் எம்.ஜி.புதூர் மற்றும் ஜம்மனை பாலம் அருகே இரண்டு இடங்களில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டி ருந்த, தடை செய்யப்பட்ட 2500 கிலோ பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து இரண்டு குடோனில் அதிகாரிகள் ஆய்வு செய்த போது வடமாநிலத்தை சேர்ந்த நரேஷ் என்பவரது குடோனில் பதுக்கி வைக்கப்படிருந்த 500 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், ஜம்மனை பாலம் அருகே இருந்த குடோ னில் இருந்து 2000 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பிளாஸ்டிக் பைகளை பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக் கப்பட்டது.
தேசிய ஒருமைப்பாட்டு முகாம்: சிக்கண்ணா மாணவர்கள் தேர்வு
திருப்பூர், மே 19- மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை சார்பாக இந்தியாவில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர் களுக்கு பயிற்சி தருவதற்காக சில மாநிலங்களில் ஏழு நாட் கள் தேசிய ஒருமைப்பாட்டு முகாம் நடைபெறுகிறது. இம்மாதம் புது டெல்லி, மத்திய பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நடைபெறுகிறது. இந்த மூன்று மாநி லங்களிலும் பல்வேறு மாநிலத்தில் இருந்து நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். அதில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்ப ணித் திட்டம் அலகு -2 மாணவர்கள் மூன்று மாநிலத்தில் நடைபெறும் முகாம்களிலும் கலந்து கொள்ள தேர்வாகியுள் ளார்கள். தமிழ்நாட்டில் கோவை பாரதியார் பல்கலை கழகத் தில் நடைபெறும் முகாமில் மூன்றாமாண்டு தமிழ் இலக்கியம் பயிலும் அலகு -2 மாணவன் காமராஜ், புது டெல்லி துவார காவில் நடைபெறும் முகாமில் இரண்டாமாண்டு பொரு ளியல் துறை மாணவன் பாலாஜி, மத்திய பிரதேசம் ராய் பூரில் நடைபெறும் முகாமில் முதலாமாண்டு கணித துறை அலகு -2 மாணவன் சுந்தரம் ஆகியோர் கலந்து கொள்கிறார் கள். இந்த மூன்று மாணவர்களையும் துணைவேந்தர் காளி ராஜ், மண்டல இயக்குனர் சாமுவேல் செல்லையா, கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், மாநில அலுவலர் செந்தில்குமார், பல்க லைக் கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, பேராசிரி யர்கள், அலுவலக பணியாளர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். கல்லூரி முதல்வர் கூறுகையில், இந்த மூன்று முகாம் களிலும் கலந்து கொள்ள தேர்வான ஒரே அரசு கல்லூரி, சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவர்கள் தான். ஒட்டு மொத்த கல்லூரிக்கு கிடைத்த பெருமை என்றார். மேலும் மோகன் குமார் கூறும் பொழுது கடந்த ஆறு வருடங்களில் 1218 நிகழ் வினை நடத்தி சாதனை படைத்துள்ளோம், அதற்கு கிடைத்த அங்கீகாரம் இது, இச்சாதனையை மலராக வெளியிட பணி கள் நடைபெற்று வருகிறது என்றார்.
வேளாண் துறை அமைச்சு பணியாளர் சங்க அமைப்பு விழா
தருமபுரி, மே 19- தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சு பணியாளர் சங்கத்தின் 55 ஆவது அமைப்பு தினத்தை முன்னிட்டு, தரும புரி வேளாண்மை துணை இயக்குனர், வேளாண் வணிகத் துறை அலுவலகம் முன்பு அமைப்பு தின கொடியேற்று விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ரேகா தலைமை வகித்தார். சங்க கொடியினை மாவட்ட தலை வர் ஆர். ஜெயவேல் ஏற்றி வைத்தார். மாவட்ட பொருளா ளர் எஸ். அண்ணாதுரை மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சு பணியாளர்கள் கலந்து கொண்டு பேசினர்.
ரூ.32 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
அவிநாசி, மே 19- அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற் பனை சங்கத்தில் புதனன்று பருத்தி ஏலம் நடந்தது. ஏலத்தில், குவிண்டால் ஒன்றுக்கு, டி.சி.எச்.ரகப்பருத்தி ரூ.12000 முதல் ரூ.13470 வரையிலும், மட்டரகப்பருத்தி குவிண்டால் ஒன் றுக்கு ரூ.3500 முதல் ரூ.6000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.31லட்சத்து 96 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வர்த்த கம் நடைபெற்றது. ஏலத்தில், கர்நாடகா, ஆனூர், கொள்ளே கால், நொக்கனூர், கோபி, நிச்சாம்பாளையம், ஆத்தூர், மேட்டூர், தர்மபுரி, வட ஆற்காடு, நெகமம், பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், சேலம், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளி லிருந்து 188பருத்தி விவசாயிகளும், 32 பருத்தி வியாபாரி களும் பங்கேற்றனர். இந்த வாரம் நடந்த ஏலத்துக்கு 873 பருத்தி மூட்டைகள் வந்திருந்தது.
சூதாடிய 8 பேர் கைது
திருப்பூர், மே 19- பல்லடத்தில் பணம் வைத்து சூதாடிய 8 பேரை கால்துறையினர் கைது செய் தனர். திருப்பூர் மாவட்டம், பல் லடம், அண்ணா நகர் பகு தியில் உள்ள காட்டில் சிலர் பணம் வைத்து சூதாட் டம் நடத்துவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தக வல் கிடைத்தது. இதைய டுத்து சம்பவயிடத்துக்கு சென்ற போலீசார் அங்கு பணம் வைத்து சூதாடிய அண்ணா நகரைச் சேர்ந்த அன்சாரி (35), நாகூர் மீரான் (32), முபாரக் (36) உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2800 ரூபாயை பறிமுதல் செய்த னர்.