districts

img

கடந்த ஆட்சியின்போது பணி நீக்கம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர்களை மீள் பணியமர்த்த கோரிக்கை

கோவை, ஏப்.25- கடந்த ஆட்சியின்போது பணி நீக்கம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர்களை மீள் பணியமர்த்த வேண்டும் என  தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர்கள் சங் கத்தின் கூட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க தாமஸ் கிளப் அலுவலகத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இக்கூட் டத்தில், அரசு ஊழியர் சங்க கோவை மாவட்ட செய லாளார் பால்ராஜ் சிறப்புரையாற்றினார். கணினி ஆசிரி யர் சங்கத்தின்  மாநில தலைவர் செல்வக்குமார் காணொளி வாயிலாக உரையாற்றினார். இதில், பணிநீக்கம் செய்யப் பட்ட அனைத்து கணினி ஆசிரியர்களையும் மீள் பணி யமர்த்த வேண்டும். இதற்கான தொடர் இயக்கத்தை மேற் கொள்வது மற்றும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட 652 கணினி ஆசிரியர்களை ஒருங்கிணைப் பது என முடிவு செய்யப்பட்டது.  முன்னதாக இக்கூட்டத்தில், அரசுப் மேல்நிலைப் பள்ளி களில் கணினி ஆசிரியர்களாக ஐந்தாண்டுகள் நிரந்தர ஊதியத்தில் பணிபுரிந்து கடந்த ஆட்சியில் பணிநீக்கம் செய் யப்பட்ட கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட கணினி ஆசி ரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.