districts

img

நன்னடத்தை கைதிகள் மூலம் மாதம் நான்கு டன் காய்கறிகள் உற்பத்தி

சேலம், ஜூலை 13- திறந்த சிறைச்சாலை கைதிகள் மூலம் மாதம் நான்கு டன் காய்கறிகள் உற் பத்தி செய்யப்பட்டு சேலம் மத்திய சிறைச்சாலைக்கு அனுப்பிவைக்கப்படுவதாக  மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.  சேலம் மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை  கைதிகள் 800க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்நிலையில் தற் செயலாக குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற கைதி களை கண்டறிந்து நன்னடத்தையின் அடிப்படையில் சேலம்  ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள திறந்தவெளி சிறை  சாலையில் பணியமர்த்தப்படுகின்றனர்.  1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திறந்தவெளி சிறைச்சாலை சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கரடு  முரடாக இருந்த திறந்தவெளி சிறைச்சாலை கடந்த  நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டு மத்திய  சிறைக்கு தேவையான காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. இந்த திறந்தவெளி சிறைச்சாலையில் 10 நன்னடத்தை கைதி கள் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார் திறந்தவெளி சிறைச்சாலையில் ஆய்வு மேற்கொண் டார். இதனைத்தொடர்ந்து அவர் கூறுகையில், சுமார் 10 ஏக்கர்  பரப்பளவில் உள்ள திறந்தவெளி சிறைச்சாலையில் உதவி  ஆய்வாளர் திருமலை தெய்வம் தலைமையில் 6 காவலர் கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நன்னடத்தை கைதி களைக் கொண்டு இயற்கையான முறையில் மண்புழு,  எரு உள்ளிட்ட உரங்களை கொண்டு கத்திரிக்காய், வெண் டைக்காய், முள்ளங்கி, புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டு மாதம் ஒன்றுக்கு மூன்று முதல் நான்குடன்கள் மத்திய சிறைக்கு அனுப்பப்படுகிறது. மேலும், நாளொன்றுக்கு 150 லிட்டர் பால் மத்திய சிறைக்கு அனுப்பப்படுகிறது. இதன் மூலம் மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு உணவு தயாரிப்பதற்கு, கைதிகளைக் கொண்டே உற்பத்தி செய்யப்படுவதால் பொருட்செலவு மிச்ச மாகிறது என்று தெரிவித்தார். மேலும் மாதமொன்றுக்கு குறைந்தது 10 டன் அளவிற்கு  காய்கறிகளை உற்பத்தி  செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இனிவரும் காலங்க ளில் மஞ்சள் பயிரிடப்பட்டு வெளி சந்தையில் விற்பனை செய் வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரி வித்தார்.