ஈரோடு, நவ.13- பொங்கல் பண்டிகையின்போது வழங்குவதற்கான இலவச வேட்டி, சேலையில் 70 சதவீதம் வேட்டியும், 55 சதவீதம் சேலையும் உற்பத்தி செய் யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டி கையின்போது அரசு சார்பில் 6 வண் ணங்களில் இலவச சேலைகளும், பார்டருடன் கூடிய வேட்டியும் உற் பத்தி செய்யப்படுகிறது. மொத்தம் 1.68 கோடி வேட்டிகள், 1.68 கோடி சேலைகள் உற்பத்தி செய்யப்படு கின்றன. தமிழகம் முழுவதும் 228 விசைத்தறி சங்கங்கள் மூலம் வேட்டி, சேலை உற்பத்தி பணியைத் தொடங்க முதற்கட்டமாக ரூ.200 கோடி நிதியை அரசு விடுவித்துள் ளது. 228 விசைத்தறி கூட்டுறவு சங்கங் களில் உறுப்பினராக உள்ள 60,000 விசைத்தறிகளில் வேட்டி, சேலை உற் பத்தி பணி நடைபெற்று வருகிறது. தற் போது 70 சதவீத வேட்டி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசைத்தறி உரிமை யாளா்கள் சங்க நிா்வாகிகள் கூறிய தாவது: வேட்டிக்கான நூல் பற்றாக் குறை ஏற்பட்ட நிலையில் வெளிச்சந் தையில் விசைத்தறி கூட்டுறவு சங்கங் களே நூலை கொள்முதல் செய்ய லாம் என அரசு அறிவித்தது. இத னால், வெளியில் நூல் கொள்முதல் செய்யப்பட்டு முழு அளவில் உற் பத்தி நடைபெற்று வருகிறது. 1.68 கோடி வேட்டிகள், 1.68 கோடி சேலை கள் உற்பத்தியை திட்டமிட்டபடி முடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற் போதைய நிலையில் 70 சதவீத வேட் டிகளும், 55 சதவீத சேலைகளும் உற் பத்தி செய்யப்பட்டுள்ளன. இத்திட் டத்தில் வேட்டி ஒன்றுக்கு ரூ.24, சேலைக்கு ரூ.43 கூலியாக அரசு வழங்குகிறது. கடந்த ஆண்டைவிட தற்போது மின் கட்டணம், தொழிலாளா்கள் கூலி, விலைவாசி உயா்வு ஏற்பட்டுள் ளது. இதனால், 30 சதவீத கூலி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க அரசிடம் முறையிட்டு, வேட்டி ஒன்றுக்கு ரூ.31, சேலைக்கு ரூ.56 கூலியாக உயர்த்தி வழங்க வலியுறுத்தி வருகிறோம். இந்நிலையில், தீபாவளி பண்டி கையை நெசவாளர்கள் கொண்டா டும் வகையில் கூலிக்கான தொகை ரூ.56 கோடியை அரசு விடுவித்துள் ளது. இந்த தொகை விசைத்தறி சங் கங்கள் மூலம் உடனடியாக விசைத்த றியாளா்களுக்கு வழங்கப்பட்டுள் ளது. மீதமுள்ள கூலி விரைவில் கிடைக்கும் என எதிா்பாா்க்கிறோம் என்றனா்.