திருப்பூர், செப்.8- இயன்முறை மருத்துவர்களின் தொழிலைப் பாதுகாக்கும் விதத்தில் மாநில பிசியோதெரபி கவுன்சிலை உடனடியாக அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இயன்முறை மருத்துவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். இயன்முறை மருத்துவர்கள் தினம் வெள்ளியன்று நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருப்பூரில் இயன்முறை மருத்துவர்கள் கோரிக்கை ஊர்வ லம் நடத்தினர். இந்த ஊர்வலத்தை திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் கொடி அசைத்துத் தொடக்கி வைத் தார். இந்த ஊர்வலத்தில், இயன்முறை மருத்துவர்களின் தொழில் பாதுகாப்பை காக்கும் விதமாக மாநில பிசியோ தெரபி கவுன்சில் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்., அரசு இயன்முறை மருத்துவ கல்லூரி அனைத்து மாவட்டங் களிலும் தொடங்கப்பட வேண்டும். தமிழ்நாடு மருத்துவ நிறுவ னங்கள் ஒழுங்குமுறைச் சட்டத்தில் பதிவு செய்துள்ள பிசியோ தெரபி கிளினிக்குகளுக்கு பதிவுச் சான்றிதழ் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தகுதிபெற்ற இயன் முறை மருத்துவர்களை அடையளம் காணவும், வேலை வாய்ப்புகளில் தகுதியானவர்களை நிர்ணயம் செய்யவும் இயன்முறை மருத்துவர்களுக்கான அரசாங்கப் பதிவு என்பது அவசிய தேவை. எனவே அதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இயன்முறை மருத்துவர்கள் திருப்பூர் மாநகராட்சி சாலை யில் இருந்து பார்க் சாலை வரை கோரிக்கைகளை வலியு றுத்தி ஊர்வலமாகச் சென்றனர்.