தருமபுரி, செப்.22- தருமபுரியில் சட்ட விரோதமாக கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை தெரிந்து, கருக்கலைப்பு சம்பவத் தில் ஈடுபட்டு வந்த 5 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித் தார். தருமபுரி மாவட்டம், காரிமங்க லம் அருகே உள்ள செம்மண்குழி மேடு பகுதியில் தனி வீடு எடுத்து, அங்கு விதிமுறைகள் மீறி, ஸ்கேன் மையம் அமைத்து இடைத்தரகர்கள் மூலம் கர்ப்பிணி பெண்களை வர வழைத்து, சிசு பெண்ணாக இருப்பின் கருக்கலைப்பு சம்பவமும் நடை பெற்று வந்துள்ளது. இதைத்தொ டர்ந்து, சட்ட விதிகளை மீறி, கருவில் பாலினம் தெரிவித்து, கருக்கலைப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த செவிலி யர் கற்பகம் உள்ளிட்ட 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி செய்தியாளர்களி டம் கூறுகையில், இடைத்தரகர்கள் மூலம் அங்கு வரும் கர்ப்பிணி பெண் களுக்கு ஸ்கேன் செய்து கருவில் உள்ள சிசுவின் பாலினம் தெரிவித்து வந்துள்ளனர். இச்சம்பவத்தில் 5 பேரை கைது செய்துள்ளனர். இத்த கைய செயலில் ஈடுபட்டு கைதாகி உள்ளவர்கள் குண்டர் சட்டத்தில் அடைக்க நடவடிக்கை எடுக்கப் படும். இதுகுறித்து பரிந்துரை வரப் பெற்ற உடன் நடவடிக்கை எடுக்கப் படும். தருமபுரி மாவட்டத்தில், இத்த கைய ஸ்கேன் மையங்கள், ஆண் குழந்தைகள் மட்டுமே பிரசவமா கும் சந்தேகத்துக்குரிய மருத்துவம னைகள் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கும் தங்களது பகுதியில் இத்தைகய போலியான ஸ்கேன் மையங்கள் இயங்குவது தெரியவந்தால், அதுகுறித்து தகவல் களை மாவட்ட நிர்வாகத்துக்கு தெரி விக்க வேண்டும், என்றார்.