தருமபுரி, நவ.30- போதிய மழை பெய்யாததால், வாணியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் நடப் பாண்டு, பொங்கல் சமயத்தில் கால் வாயில் பாசனத்துக்கு தண்ணீர் திறப் பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவ சாயிகள் தெரிவித்தனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட் டிப்பட்டி அருகே உள்ள முள்ளிக் காடு, சேர்வராயன் மலை அடிவாரத் தில் அமைந்துள்ளது. இங்குள்ள வாணியாறு அணை 65 அடி கொள் ளளவு கொண்டது. இந்த அணை யின் மூலம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில், 17 கிராமங்களில் உள்ள 10,517 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியை பெறுகிறது. மேலும், சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகள், விவசாய கிணறுக ளுக்கு நிலத்தடி நீராதாரமாக விளங் குகிறது. கடந்தாண்டு வாணியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி யான ஏற்காடு மலையில் பெய்த தொடர் மழையால், அணை நிரம் பியது. இதையடுத்து பழைய ஆயக் கட்டு கால்வாயில், பாசனத்துக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால், இந் தாண்டு இதுவரை போதிய மழை பெய்யவில்லை. மேலும், அணை யில் போதிய அளவில் தண்ணீர் இருப்பும் இல்லை. போதிய தண் ணீர் இல்லாததால், அணையின் மூலம் விவசாயம் செய்ய காத்துக் கொண்டிருந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து வாணியாறு அணை பாசன விவசாயிகள் கூறு கையில், கடந்தாண்டு ஏற்காட்டில் தொடர் மழை பெய்ததால், வாணி யாறு அணை நிரம்பி, பழைய ஆயக்கட்டு கால்வாய் வழியாக உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் மோளையானூர், வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், ஓந்தியாம்பட்டி, தென்கரைக் கோட்டை ஆகிய ஏரிகள் நிரம்பியது டன், உபரிநீர் ஆற்றில் வெளியேறி யது. இதன் மூலம், அரூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் சென்றது. ஆனால், இந்தாண்டு போதிய மழை இல்லாத தால் அணை நீர்மட்டம் குறைவாக உள்ளது. வழக்கமாக பொங்கல் சமயத்தில் தண்ணீர் இருப்பை பொறுத்து, பாசனத்திற்காக தண் ணீர் திறக்கப்படும். இந்தாண்டு கால் வாயில் தண்ணீர் திறப்பிற்கான வாய்ப்பு நாளுக்குநாள் குறைந்து வருகிறது. இது தவிர முக்கிய ஏரி களிலும் தண்ணீர் குறைவாக உள் ளதால், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் வேக மாக குறையும் அபாயம் ஏற்பட்டுள் ளது. இனிவரும் நாட்களில் தொடர்ச் சியாக கனமழை பெய்து, வாணி யாறு அணை நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே, பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது, என்றனர்.