ஈரோடு, ஜூலை 7 அரசு கலை பண்பாட்டு துறை சார் பில் நடந்த மாநில, மாவட்ட அளவி லான கலை போட்டிகளில் வெற்றி பெற் றவர்களுக்கு காசோலை மற்றும் சான்றி தழை மாவட்ட வருவாய் அலுவலர் சாந் தகுமார் வழங்கி பாராட்டினார். ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் சார் பில் கலைத்துறையில் சிறந்து விளங்கு கின்ற இளைஞர்களை கண்டறிந்து, அவர்களை ஊக்கப்படுத்திட 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்க ளுக்கு மாவட்ட மற்றும் மாநில அள விலான கலை போட்டிகள் நடத்திட அர சாணை வெளியிடப்பட்டது. அதன்படி, கோயம்புத்தூர் மண்டல கலைப் பண் பாட்டு மையத்திற்கு உட்பட்ட ஈரோட் டில் மாவட்ட அளவிலான கலைப் போட்டி கள் குரலிசை, கருவியிசை, பரதநாட்டி யம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் போட்டிகள் ஈரோடு பி.பெ. அக்ரஹாரத்தில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நடத்தப்பட் டது. இந்நிலையில், வெற்றி பெற்றவர்க ளுக்கு பரிசளிப்பு விழா ஆட்சியர் அலுவ லக கூட்டரங்கில் அண்மையில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவ லர் சாந்தகுமார் தலைமை வகித்தார். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம், 2ம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.4 ஆயி ரத்து 500, 3ம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 500க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கி, கவுரவிக்கப் பட்டனர். இந்நிகழ்ச்சியில், கோயம்புத் தூர் மண்டல கலைப் பண்பாட்டு மைய உதவி இயக்குநர் நீலமேகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.