உடுமலை, மார்ச் 10- மடத்துக்குளம் பேருந்து நிலையம், தனியார் வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிவருவதை தடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சி – திண்டுக்கல் தேசிய நெடுச்சா லையில் மடத்துக்குளம் பேருந்து நிலையம் அமைந் துள்ளது. உடுமலை, பழனி, கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு நாள்தோறும் 100க்கும் மேற் பட்ட பேருந்துகள் இந்த பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றன. இந்நிலையில், பேருந்து நிலை யத்திற்குள்ளே பல ஆண்டு காலம் வெளி மாவட் டங்களுக்கு செல்லும் பேருந்துகள் வராமல் தேசிய நெடுச்சாலையில் மட்டுமே நின்று செல்வதால் பயணிகளுக்கு பெரும் துன்பத்திற்குள்ளாகி வந்த னர். பல போராட்டங்கள் நடைபெற்றதன் விளை வாக தற்பொழுது அனைத்து வெளி மாவட்ட பேருந் துகளும் உள்ளே வந்து செல்கின்றன. ஆனால், பேருந்து நிலையத்திற்குள் தனியார் வாகனங்கள் எவ்வித அனுமதியும் இல்லாமல் நிறுத்தி வைக்கப் படுகின்றன. இதனால் பேருந்துகள் உள்ளேயும், வெளியேயும் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், எந்த பேருந்து எங்கு நின்று செல்கிறது என்ற குழப்பத்தை பயணிக ளுக்கு ஏற்படுத்தும் விதமாக இந்த தனியார் வாக னங்களின் ஆக்கிரப்புகள் உள்ளது. இதுகுறித்து பயணிகள் கூறுகையில், பல ஆண்டுகளுக்கு பிறகு இப்பொழுது தான் வெளி மாவட்டத்திற்கு செல்லும் பேருந்துகள், பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்கிறது. ஆனால், தனி யார் கார் மற்றும் வாடகை வேன்களை பேருந்து நிலையம் முழுமைக்கும் நிறுத்தியுள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பேருந்து நிலையம் தனியார் வாகனங்கள் நிறுத்து மிடமாக மாறி வருகிறது. நாங்கள் பேருந்துகளில் ஏற முடியாமல் பெரிய அவதிக்குள்ளாகி வருகி றோம். இந்த பேருந்து நிலைய வழியில் தான் ரயில் நிலையம் செல்ல வேண்டும். அங்கு செல்வ தற்கும் தனியார் வாகனங்கள் ஆக்கிரப்புகளை தாண்டி தான் செல்ல வேண்டியுள்ளது. மேலும், பேருந்து நிலையத்திலுள்ள கழிப்பறைகளை பயன் படுத்த முடியாத நிலையில் உள்ளது. மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அமைக் கப்பட்ட கழிவறை, கட்டிய நாள் முதல் இன்று பயன் படுத்த முடியாத நிலையில் தான் உள்ளது. எனவே, தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் மடத்துக்குளம் பேருந்து நிலையத்தை முறையாக பராமரித்து, தனியார் வாகனங்களின் ஆக்கிரப்பு களை அகற்ற வேண்டும், என வலியுறுத்தினர்.