districts

img

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: அமைச்சர்கள் பங்கேற்பு

திருப்பூர், நவ.5- தாராபுரத்தில் ஞாயிறன்று நடைபெற்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல் விழி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று, பணி நியமண ஆணைகளை வழங்கினர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மகாராணி கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் மாபெ ரும் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளை ஞர் திறன் திருவிழா ஞாயிறன்று நடைபெற் றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலு வலர் தா.ப.ஜெய்பீம் தலைமை வகித்தார். இதில் மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு, பணி நியமன ஆணைகளை வழங்கினர். இதன்பின் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில், இதுவரை நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 311 நபர்களுக்கு வேலை வாய்ப்பு  வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை  பொறுத்தவரையில் முதல் முதலாக தாரா புரம் மகாராணி கல்லூரியில் தான் நடை பெற்றது. இதில் ஏறத்தாழ 121 தனியார் நிறு வனங்கள் பங்கேற்று 793 பேர் தேர்வு  செய்யப்பட்டனர். அதேபோல காங்கேயத் தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 204 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 2,394 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். திருப் பூர் மாநகராட்சியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 520 நிறுவனங்கள் பங் கேற்று 8,333 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது, என்றார். இதைத்தொடர்ந்து அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பேசுகையில், முத்தமி ழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன் னிட்டு, தாராபுரம் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார் துறை  வேலை முகாம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. மாணவர்கள் அனைவரும் போட்டித் தேர்வு களுக்கு தங்களை தயார்படுத்தி கொள்ள  வேண்டும். தனியார் துறை வேலை வாய்ப்பை நீங்கள் பெரும் பொழுது, அதிலி ருந்து பெறப்படும் வருவாய் மூலம் அடுத்த கட்டமாக அரசு பணிகளுக்கு செல்ல உதவி யாக இருக்கும். தொழில் முனைவர்களுக்கு அரசு பல திட்டங்களை அறிவித்துள்ளது. சிறு தொழில்கள் செய்வதற்கு அரசு கடன் உதவி கள் வழங்குகிறது. ஆகவே இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் அனைவ ரும் பயன்படுத்தி தங்கள் வாழ்க்கையில் மேம் படுத்திக்கொள்ள வேண்டும், என்றார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், மண்டல இணை இயக்குநர் (வேலை வாய்ப்பு) ஆ.ஜோதி மணி, திருப்பூர் மாநக ராட்சி 4 ஆம் மண்டலத் தலைவர் இல.பத்ம நாபன், திட்ட இயக்குநர் (மகளிர்த்திட்டம்) சோ.வரலட்சுமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆர்.சுரேஷ், தாராபுரம் நகர்மன்ற  தலைவர் பாப்புக்கண்ணன், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் எஸ்.வி.செந்தில் குமார், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற் றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.