districts

எய்ட்ஸ் உள்ளதாக தவறாக தெரிவித்த தனியார் மருத்துவமனைக்கு அபராதம்

நாமக்கல், ஆக. 2- எய்ட்ஸ் உள்ளதாக தவறாக தெரிவித்த மருத்துவமனையினால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவை மாவட்டம், பீள மேட்டைச் சேர்ந்த கிருஷ்ணசாமி (71) என்பவர், கடந்த 2017 ஆம்  ஆண்டு சத்தியமங்கலம் சாலையி லுள்ள ஒரு தனியார் கண் மருத்து வமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார். அந்த மருத்துவ மனையில் கண்களை பரிசோதித்த  மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறியுள் ளனர். இதற்காக, ரத்தம் மற்றும்  சிறுநீர் உள்ளிட்ட பரிசோதனை களை செய்யுமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. பரிசோதனைகளின் முடிவில் அவருக்கு எய்ட்ஸ் நோய்  உள்ளதாக மருத்துவமனை தெரி வித்துள்ளது. இதனால் அதிர்ச்சிய டைந்த கிருஷ்ணசாமி கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையிலும், மற்றொரு தனியார்  மருத்துவமனையிலும் பரிசோ தனை செய்து பார்த்ததில் அவ ருக்கு எய்ட்ஸ் நோய் இல்லை என்று  மருத்துவ அறிக்கையை பெற்றுள் ளார்.  இதனால் பாதிப்புக்குள்ளான கிருஷ்ணசாமி, கடந்த 2018 ஆம் ஆண்டு கோவை நுகர்வோர் நீதி மன்றத்தில் எய்ட்ஸ் நோய் இருப்ப தாக தவறாக தெரிவித்த, மருத்துவ மனையின் மீது வழக்கு தாக்கல்  செய்தார். விரைவான விசார ணைக்கு, கடந்த 2022 ஆம் ஆண்டு  ஜூலை மாதம், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி வீ.ராமராஜ் திங்களன்று தீர்ப்பு வழங்கினார். அதில்,  மருத்துவமனை கவனக்குறை வுடன் செயல்பட்டு அலட்சியமான சேவை புரிந்துள்ளதால், வழக்கு  தாக்கல் செய்தவருக்கு இழப்பீ டாக ரூ.5 லட்சத்தை நான்கு வாரங் களுக்குள் மருத்துவமனை நிர் வாகம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோன்று, கோவை மாவட்டம், கோபாலபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (34) என்ப வர், எச்டிஎப்சி வங்கியில் கிரெடிட் கார்ட் பெற்றுள்ளார். 2017 பிப்ரவரி இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்ளுமாறு வங்கியில் இருந்து  தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்  அதற்கு மறுப்பு தெரிவித்து விட் டார். இருப்பினும் இன்சூரன்ஸ் பாலிசிக்கு என கிரெடிட் கார்டு மூலம் ரூ.30 ஆயிரத்தை வங்கி எடுத்துக்கொண்டது. இதுகுறித்து வங்கியில் புகாரளித்தும் பணத்தை  திருப்பித் தரவில்லை.  பணத்தை திருப்பி தராததால் வங்கி மீது, கடந்த 2018 ஆம் ஆண்டு தாக்கல்  செய்த வழக்கில் தீர்ப்பளித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றம், வங்கியின் செயல் நேர்மை யற்ற வர்த்தக நடைமுறையாகும். எனவே, ராஜேந்திரனுக்கு வங்கி பிடித்தம் செய்த ரூ.30 ஆயிரம், அதற்கு வட்டி மற்றும் இழப்பீடு உட்பட ரூ.50 ஆயிரத்தை நான்கு  வாரங்களுக்குள் வழங்க வேண் டும் என்று உத்தரவிட்டது. இதேபோல, கோவையிலுள்ள சாந்திநிகேதன் சில்க்ஸ் நிறுவனத் தினர், கேரளாவிற்கு ஆலப்புழா பார்சல் சர்வீஸ் நிறுவனம் மூலம் மூன்று சேலை மூட்டைகளை கடந்த 2016 ஆம் ஆண்டு அனுப்பி உள்ளனர். சேலை மூட்டைகளை பார்சல் நிறுவனம் உரியவரிடம் ஒப்படைக்கவில்லை எனக்கூறி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த நாமக் கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம்,  பார்சல் நிறுவனத்தின் செயல் சேவை குறைபாடு எனக்கூறி பாதிக் கப்பட்டவருக்கு அனுப்பப்பட்ட பட்டு சேலைகளுக்கான தொகை யும், அதற்கான வட்டியும் சேர்த்து  ரூ.3.35 லட்சம் மற்றும் இழப்பீடு ரூ. ஒரு லட்சத்தை நான்கு வாரங்க ளுக்குள் வழங்க வேண்டும் என்று  உத்தரவிட்டது.