சேலம், ஜூலை 28- அடிப்படை பணியாளர் களின் முன்னுரிமை பட்டி யலை வெளியிடுமாறு வலி யுறுத்தி தமிழ்நாடு கல்வித் துறை நிர்வாக அலுவலர் கள் சங்கம் சார்பில் சேலம் நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்தஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் மா.ராம்குமார் தலைமை வகித்தார். அடிப்படை பணியில் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் பணி முடித்த வர்களுக்கு இளநிலை உதவியாளர் களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என இதில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் நிர்வாகி கள், ச.விஜய மனோகரன், க.முத்து குமரன், பொன்.ஜெயராம், ராஜேஷ். பா.தர்மலிங்கம் மற்றும் செல்வகுமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.