districts

img

குடிநீர் திட்டப் பணிகளுக்கு முன்னுரிமை: அமைச்சர்

தாராபுரம், மார்ச் 17 - குடிநீர் திட்டப் பணிகளுக்கு முன் னுரிமை அளிக்கப்பட்டு செயல்படுத் தப்படுவதாக தாராபுரத்தில் நடை பெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச் சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தனர். தாராபுரம் நகராட்சி, ஊராட்சி ஒன் றியம், கொளத்துப்பாளையம் மற் றும் சின்னக்காம்பாளையம் பேரூ ராட்சிகளில் நடைபெற்று வரும்  வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற் றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தலைமையில் வெள்ளி யன்று நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு பின் அமைச்சர்  மு.பெ.சாமிநாதன் பேசுகையில், இந்த  ஆய்வுக்கூட்டத்தில் முழுக்க முழுக்க  குடிநீர் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முத் தூர், காங்கேயம் கூட்டுக்குடிநீர் திட் டம் மூலமாகத்தான் காங்கேயம் சட்ட மன்ற தொகுதி, தாராபுரம் சட்ட மன்ற தொகுதி பொதுமக்கள் பயன் பெறுகின்றனர். மேலும் அமராவதி ஆற்று நீரை ஆதாரமாக கொண்டு வெள்ளகோவில் நகராட்சி, காங்கே யம் நகராட்சி, தாராபுரம் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் சில  குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகிறது.  காவேரி ஆற்றை நீர் ஆதாரமாக கொண்டு இச்சிப்பாளையம் பகுதி யில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு முத் தூர், மேட்டுக்கடை பகுதியிலிருந்து வெள்ளகோவில்,

மூலனூர் மற்றும் தாராபுரம் சின்னக்காம்பாளையம் பேரூராட்சி, ருத்ராவதி பேரூராட்சி  வரை இத்திட்டங்கள் செயல்படுத் தப்பட்டு உள்ளது. மேலும். இத்திட் டத்தை விரிவுபடுத்துவதற்கு தமிழ் நாடு முதலமைச்சர் மற்றும் நகராட்சி  நிர்வாகத்துறை அமைச்சர் கவனத் திற்கு எடுத்துச் சென்று ரூ.63.00  கோடி மதிப்பீட்டில் மின் மோட்டாடர் களும். பைப் லைன்களும் மாற்றிய மைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் இப்பணிகள் துவங்கப் பட்டு பொதுமக்களின் பயன்பாட் டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு  அவர் கூறினார். தொடர்ந்து 4 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.50 லட்சம் மதிப் பீட்டில் ரூ. 6 லட்சம் கடனுதவி காசோ லைகளை அமைச்சர்கள் வழங்கி னார்கள். இந்நிகழ்ச்சியில், தாராபுரம்  கோட்டாட்சியர் குமரேசன், திருப் பூர் மாநகராட்சி 4ஆம் மண்டலத் தலைவர் இல.பத்மாநபன், மண்டல இணை இயக்குநர் (நகராட்சி நிர்வா கம்) ராஜன், தாராபுரம் ஊராட்சி ஒன் றிய குழுத்தலைவர் எஸ்.வி.செந்தில் குமார், தாராபுரம் நகராட்சி தலைவர்  கு.பாப்பு கண்ணன், கொளத்துப்பா ளையம் பேரூராட்சி தலைவர் சுதா கருப்புசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி, மற்றும் நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.