districts

img

மழை காரணமாக மலைப்பூண்டு விலை உயர்வு!

மேட்டுப்பாளையம், ஆக. 3 மேட்டுப்பாளையம் ஏல மண்டிகளுக்கு மழை காரணமாக மலைப்பூண்டு வரத்து குறைந்ததால், அதன் விலை அதிகரித்துள் ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத் தில் வெள்ளைப்பூண்டு மொத்த வியாபார ஏல மண்டிகள் இயங்கி வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் விளையும் வெள்ளைப்பூண்டு கள் மட்டுமின்றி ராஜஸ்தான், இமாச்சல் பிர தேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந் தும் இங்கு லாரிகள் மூலம் டன் கணக்கில் வெள்ளைப்பூண்டுகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது நீலகிரியில் வெள்ளைப்பூண்டு சீசன் துவங்கி வரத்து துவங்கியுள்ள அதே நேரத்தில் மழை காரணமாக வரத்து குறைந்தே காணப்படுகிறது. வடமாநிலங் களில் பூண்டு விளைச்சல் குறைந்து, அங்கி ருந்து வரும் பூண்டின் வரத்தும் குறைந்து விட்டது. இதனால், நீலகிரி மலைப்பூண்டின் விலை உயர துவங்கியுள்ளது. குறிப்பாக, வழக்கமான தேவைகள் தவிர ஏராளமான வடமாநில விவசாயிகள் நீலகிரியில் விளை யும் மலைப்பூண்டை விதைப்பூண்டாக வாங்கி செல்வதால் இதன் விலையும் தற் போது உயர துவங்கியுள்ளது. இதனால், சாதாரணமாக ரூ.150 முதல் ரூ.200 வரை விலை போகும் மலைப்பூண்டுகள், தற்போது ரூ.300 முதல் ரூ.350 வரை விலை போகிறது. இதனால், மேட்டுப்பாளையம் பூண்டு சந் தைக்கு வெள்ளைப்பூண்டு கொண்டு வரும் நீலகிரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சிய டைந்துள்ளனர். சீசன் துவங்கி விட்டதை யடுத்து நீலகிரியில் இருந்து பூண்டு வரத்து மேலும் அதிகரிக்கும் என்றும், அப்போது ஓரளவு விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் பூண்டு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.