districts

img

சனத்குமார் நதியில் கழிவுநீர் கலப்பதை தடுத்திடுக

தருமபுரி, டிச.5- தருமபுரி நகராட்சி, 2 ஆவது வார் டில் உள்ள சனத்குமார்‌ நதி கால்வா யில் கழிவுநீர்‌ கலப்பதை தடுக்க வேண் டும் என அப்பகுதி பொதுமக்கள் வலி யுறுத்தி உள்ளனர். தருமபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இவற்றில் நகராட்சி எல்லையையொட்டி 2 ஆவது வார்டு அமைந்துள்ளது. இந்த வார்டில் தருமபுரி, திருப்பத்தூர் மெயின் ரோடு, பீமன் தெரு, கொட்டாய் மேடு, ராயப்ப கவுண்டர் தெரு, ராஜகோபால் கவுண்டர் தெரு, பெரமன் தெரு, ரத்தினம் வீதி உள்பட 16 தெருக்கள் அமைந்துள் ளன. இந்த வார்டில் 484 வீடுகள் உள்ளன. 50க்கும் மேற்பட்ட தெரு விளக்குகளும் உள்ளன.  தருமபுரி வழியாக ஓடும் சனத் குமார் நதி கால்வாய் இந்த வார்டுக் குட்பட்ட பகுதியில் செல்கிறது. திருப் பத்தூர்- மொரப்பூர் சாலைகள் பிரி யும் ரவுண்டானா, நகராட்சி பாதாள சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை இந்த வார்டில் அமைந் துள்ளன.

இந்த பகுதியில் விவசாயி கள், தொழிலாளர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்த வார்டில் உள்ள அனைத்து தெருக்களின் சாலைகளும் குறுகலாக உள்ளன. இதேபோல் கழிவுநீர் கால்வாய்கள் சிறியதாக உள்ளதால், குப்பைகள்  அகற்றுதல், கழிவுநீர் வெளியேற்றத் தில் நடைமுறை பிரச்சனைகள் ஏற் படுகின்றன. இந்த வார்டு பகுதியாக வழியாக  ஓடும் சனத்குமார் நதி கால்வாயில் கழிவுநீர் கலப்பதால் இந்த பகுதி யில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வரு கிறது. இதேபோல் தருமபுரி நக ராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் மூலம் வெளியேறும் கழிவுநீர் சனத்குமார் நதி கால்வாயில் கலப்ப தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப் படுகிறது. மேலும், கழிவுநீரால் அப் பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது.  எனவே சனத்குமார்‌ நதியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும். இப் பகுதியில் சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்து துர்நாற்றம் வீசுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.