அவிநாசி, ஜன.20- அவிநாசி அருகே கருவலூரில் வங்கி ஊழிய ருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து வங் கிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதேநேரம், வங்கி யின் முன்பு ஊராட்சி மன்ற தலைவரே தூய்மைப் பணியில் ஈடுபட்டது பலரையும் ஆச்சரித்திற்குள்ளாகி யது. நாடு முழுவதும் கொரோன தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந் நிலையில் அவிநாசி அருகே கருவலூரில் உள்ள கனரா வங்கியில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த வங்கி கிளைக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.இதற்கிடையே, கருவலூர் ஊராட்சி மன்ற தலைவரான முருகன், வங்கியின் முன்புறமாக கிருமி நாசினி மற்றும் பவுடர் தெளிக்கும் பணியில் ஈடுபட்டது அனைவரையும் ஆச்சரித்திற்குள்ளாகியது. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் முருகனி டம் கேட்டபோது, டேங்க் ஆப்பரேட்டர் ஊழியராக கரு வலூர் ஊராட்சியில் பல வருடமாக பணியாற்றி வந் தேன். அதனை தொடர்ந்து, ஊராட்சி மன்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்றேன். ஆதலால் இப்பணி செய்வதில் எனக்கு எவ்வித சிரமமும் கிடையாது. டேங்க் ஆப்பரேட் டராக சிறந்த முறையில் பணியாற்றியதன் காரணமாகத் தான் ஊராட்சி மன்ற தலைவராக மக்கள் என்னை தேர்வு செய்துள்ளார்கள். அதனை மனதில் வைத்துக் கொண்டு தான் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகிறேன் என தெரி வித்தார்.