கோவை, நவ. 30- பொள்ளாச்சியில் அமைச்சர் சு.முத்து சாமி பங்கேற்ற நிகழ்வில், 3 ஆயி ரத்து 569 பயனாளிகளுக்கு ரூ.68 கோடி மதிப்பிலான திட்டங்கள் வழங்கப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்ற நிகழ்வு நடைபெற்றது. இதில், ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கு.சண்முகசுந்தரம் எம்பி., மாவட்ட வருவாய் அலுவலர் மோ.ஷர் மிளா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், 154 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு, 18,246 மாணவ மாணவியர்களுக்கு ரூ.8.79 கோடி மதிப்பிலான மிதிவண்டிகள் வழங்கப்ப டவுள்ளது. இதன் துவக்கமாக, பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், மேல்நிலை முத லாமாண்டு பயிலும் ரூ.9.13 இலட்சம் மதிப்பி லான மிதிவண்டிகளை 192 மாணவியர்க ளுக்கு அமைச்சர் சு.முத்துசாமி வழங்கி னார். இந்நிகழ்வில், சு.முத்துசாமி பேசுகை யில், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச் சியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 3,569 பயனாளிகளுக்கு ரூ.68.25 கோடி மதிப்பி லான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டுள்ளன. இதுபோல் ஒவ்வொரு மாவட் டத்திலும் பல்வேறு அரசு நலத்திட்ட உத விகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது என்றார்.