districts

img

தீண்டாமை ஒழிப்பு முன்னணி திருப்பூர் மாவட்ட மாநாட்டு தீர்மானங்கள் அமைச்சரிடம் வழங்கல்

திருப்பூர், ஜூலை 16- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் திருப்பூர் மாவட்ட மாநாட்டில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, மாவட்ட நிர்வாகிகள் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வ ராஜிடம் மனுவாக நேரில் வழங்கினர். கடந்த ஞாயிறன்று, வெள்ளகோ விலில் நடந்த, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருப்பூர் மாவட்ட  4 ஆவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்களை, ஆதி திராவிடர் மற்றும்  பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜிடம், தாராபுரம் முகாம் அலுவலகத்தில் சனி யன்று நேரில் வழங்கப்பட்டது. கோரிக்கைகள் குறித்து நிர்வாகி கள் அவரிடம் விளக்கிக் கூறினர். அதை  முழுமையாக கேட்டு, சில கோரிக்கை களில் பணிகள் நடைபெற்று வருகின் றன என்று பதிலளித்தார். இச்சந்திப்பில், மாநில துணைப் பொதுச் செயலாளர் யு.கே.சிவஞானம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ச.நந்தகோபால், மாவட்டச் செயலாளர் சி.கே.கனக ராஜ், மாவட்டப் பொருளாளர் ஏ.பஞ்ச லிங்கம், மாவட்ட துணைத் தலைவர்கள்  எஸ்.சண்முகம், முருகசாமி, பி.செல்ல முத்து ஆகியோர் பங்கேற்றனர்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார்,  சிபிஎம் தாராபுரம் தாலூகா செயலாளர்  என்.கனகராஜ், வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த எம்.வடிவேல் ஆகியோர் உடனி ருந்தனர்.