districts

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

சுகாதார நிலையத்தில் குளுகோஸ் இல்லை திருப்பி அனுப்பப்படும் கர்ப்பிணி பெண்கள்

திருப்பூர், ஜூன் 24– திருப்பூரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத் தில் ரத்த பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்க வேண்டிய குளுகோஸ் இல்லை என மூன்று வாரங் களாக திருப்பி அனுப்பப்படுகின்றனர். திருப்பூர் கோயில்வழியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கர்ப்பிணிகளுக்கு  ஜிடிடி எனப்படும் சர்க்கரை நோய் கண்டறியும் சோதனை வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் செய்யப்படுகிறது. இந்த சோதனையை செய்வதன் மூலம் கர்ப்பிணி பெண்க ளுக்கு சர்க்கரை நோய் உள்ளதா என்பதை துல்லியமாக கண் டறிவதுடன், அதற்குரிய மருந்துகளும் வழங்கப்படும். இந்த  சோதனையை மேற்கொண்டு சிகிச்சை அளிப்பதன் மூலம் கருக்கலைப்பு ஆவதை தடுக்க முடியும், வயிற்றில் வளரும்  சிசுவுக்கு ஏற்படக்கூடிய இதர பாதிப்புகளையும் முன்கூட் டியே தடுக்க முடியும் என மருத்துவ வட்டாரத்தினர் கூறு கின்றனர். இந்நிலையில், கோயில்வழியைச் சேர்ந்த நித்யா (22) என்ற கர்ப்பிணி குளுகோஸ் ரத்த பரிசோதனை செய்வதற் காக கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு அங்குள்ள நகர்ப் புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் போயிருக்கிறார். அப் போது அங்கு குளுகோஸ் இருப்பு இல்லை, புதிதாக வந்தால் தான் கொடுக்க முடியும் என்று கூறி ரத்த பரிசோதனை செய் யாமல் திருப்பி அனுப்பி விட்டனர். இதேபோல் அடுத்தடுத்து மூன்று முறை வந்தும் திருப்பி அனுப்பியுள்ளனர். இது போல் இன்னும் எத்தனை கர்ப்பிணி கள் திருப்பி அனுப்பப்பட்டனர் என்று தெரியவில்லை. மருத் துவத்துறை பணியாளர்களிடம் கேட்டபோது, குளுகோஸ் மட்டுமல்ல, நோயாளிகளுக்கு அவசியம் தேவைப்படக் கூடிய ஏராளமான மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளது என்று கூறினர். இப்பிரச்சனை குறித்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ஜெகதீஸ்குமாரை தொடர்பு கொள்ள பல முறை  முயன்றும் அவர் அலைபேசியை எடுக்கவில்லை. எனவே  அவரது பதிலைப் பெற முடியவில்லை.

கேபுதிய மேம்பாலத்தில் இரண்டாவது விபத்து: வாலிபர் பலி

கோவை, ஜூன் 24- கோவை - திருச்சி சாலையில் புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பாலத்திலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். ஈரோட்டைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (19). இவர், வெள்ளி யன்று தனது இருசக்கர வாகனத்தில் கோவை - திருச்சி சாலையில் உள்ள மேம்பாலத்தின் வழியாக சிங்காநல்லூரி லிருந்து உக்கடம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மேம்பாலத்தில் சுங்கம் வளைவில் வந்தபோது இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. அந்த வாலிபர் மேம்பாலத்தில் இருந்து 40 அடி உயரத் தில் கீழே தூக்கி வீசப்பட்டார். இதில்,  பலத்த காயமடைந்த அவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவ ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேமேம்பாலத்தில் வாலிபர் ஒருவர் விபத்தில் சிக்கி  உயிரிழந்தார். இதனால் மேம்பாலத்தில் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என  அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மேலும், தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், வெள்ளியன்று இரண்டாவது முறை யாக வாலிபர் ஒருவர் விபத்தில் சிக்கியுள்ளது வாகன ஓட்டி களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக,  இவ்விபத்து குறித்து போக்குவரத்து காவல் துணை ஆணை யர் மதிவாணன், உதவி ஆணையர் சரவணன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதன் பின் துணை ஆணையர் மதிவாணன் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து மேம்பாலத்தில் விபத்துகளை தடுக்க தேவையான இடங்களில் உடனடியாக வேகத்தடை அமைக்க மதிவாணன் உத்தரவிட்டார்.

அக்னிபாத் திட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு

கோவை, ஜூன் 24– அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் ரயில்  மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்று வரும்  நிலையில், கோவை ரயில் நிலையம் மற்றும் நடைமேடை யில்  பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்துள்ளனர். ஒன்றிய அரசின் தான்தோன்றித்தனமான அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிர மாகி பரவி வருகிறது. ஒன்றிய அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து  ரயில் மறியல், ரயில் எரிப்பு போன்ற சம்பவங்கள் நடை பெற்று வருகிறது. வடமாநிலங்களில் வலுத்து வந்த போராட் டங்கள், தற்போது தென்னிந்தியாவிலும் பரவி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதும் இந்த போராட்ட கனல் உக்கிரமடைந்து வருகிறது. வங்கி, ரயில், எல்ஐசி போன்ற துறைகளை தனியார் மயமாக்கப்படும் போது அந்தந்தந்த துறை சார்ந்த ஊழி யர்களும்இ இடதுசாரி கட்சியினருமே பொதுத்துறையை பாதுகாக்க வேண்டும் என்கிற முழக்கத்தோடு போராடி வந்தனர். தற்போது ரணுவத்தையே ஒன்றிய அரசு  காண்ரெக்ட் விடுகிறது என்கிற சர்வாதிகார நடவடிக்கையை  கண்டித்து தன்னெழுச்சியான போராட்டங்கள் வெடித்து வரு கிறது. இதனையடுத்து அனைத்து ரயில் நிலையங்களிலும் பாகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் பலப்படுத்தி வரு கின்றனர். இதனிடையே புதனன்று இந்திய மாணவர் சங்கம்  மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை  ரயில் நிலையத்தை முற்றுகையிட்டும், ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டும் தங்களது எதிர்ப்பை வெளிப்ப டுத்தினர். இதனையடுத்து கோவை ரயில் நிலையத்தில் வியாழன்று பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.  இதுகுறித்து ரயில்வே காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், இதுவரையிலான போரட்டங்கள் ரயில் நிலை யம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடுவார் கள். அவர்களை உள்ளூர் காவல்துறையினர் கைது செய் வார்கள். ஆனால் தற்போது உள்ளூர் காவல்துறையை ஏமாற்றிவிட்டு ரயில்நிலையத்திற்குள்ளேயே வந்து தண்ட வாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தும் அளவிற்கு வந் துள்ளது. ஆகவே கோவை ரயில் நிலையத்தை சுற்றியும், அனைத்து நடைமேடைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது, என்றார்.

மின்தடை

ஈரோடு, ஜூன் 24- பெருந்துறை திங்களுர்  துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி 28 ஆம் தேதி செவ்வாயன்று நடைபெற உள்ளது. இத னால் பெருந்துறை கோட் டத்தைச் சார்ந்த திங்களுர், கல்லாகுளம், வெட்டையன் கிணறு, கிரே நகர், பாப்பம் பாளையம், மந்திரிபாளை யம், நல்லாம்பட்டி, சுப்பை யன்பாளையம், தாண்டா கவுண்டண் பாளையம், சுங் ககாரன்பாளையம், சீனாபுரம் மேற்கு பகுதி மட்டும், மேட் டூர், நடுவலசு, ஊத்துப்பா ளையம், மல்லநாய்கனூர், எல்லப்பாளையம், கோமை யன் வலசு, தாசம்புதூர், வேலாங்காடு, மானூர்காடு, மம்முட்டி தோப்பு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி, சுகாதார நிலையத்தில் தூய்மை பணி நடத்த முடிவு

திருப்பூர், ஜூன் 24 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அவிநாசிகவுண்டம் பாளையம், அங்கேரிபாளையம் கிளை மாநாடு நடை பெற்றது. சங்க ஒன்றிய தலைவர் துரை சதீஷ்குமார் துவக்கி  வைத்தார். ஒன்றியச் செயலாளர் அருள் வாழ்த்தினார். மாவட்டக்குழு உறுப்பினர் ராம்கி புதிய நிர்வாகிகளை அறி முகம் செய்து பேசினார். அங்கேரிபாளையம் கிளைத் தலை வர் - நரேந்திர பிரசாத், துணைத் தலைவர் – சுரேஷ்குமார்,  செயலாளர் - பிரணவ் ராஜ், பொருளாளர் – சண்முகம், துணைச் செயலாளர் பிரதான் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். அவிநாசிகவுண்டம்பாளையம் கிளை தலைவர் – கதிர் வேல், செயலாளர் – சந்தோஷ், பொருளாளர் – வினோத், துணைத்தலைவர் – சக்தி, துணைச் செயலாளர் – முத்துரா மன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு பள்ளி கள் தூய்மைப்பணி இயக்கம் நடத்துவது, கிளை பகுதியில்  இரவு நேர பகத்சிங் பாடசாலை அமைப்பது, ரத்த தான  முகாம் நடத்துவது மற்றும் விளையாட்டுப் பூங்கா அமைத்து  தரக் கோருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை, ரூ.1.50 லட்சம் பணம் கொள்ளை

திருப்பூர், ஜூன் 24 - திருப்பூர் மாநகரின் மையப் பகுதியில் கருவம்பாளை யம் ஏ.பி.டி சாலை பகுதியில் குடியிருந்து வருபவர் அமர்சிங்  (54) இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். ஜவுளி கடை  நடத்தி வருகிறார்.  இவர் தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை காலை  கேரளாவிற்கு சென்றுள்ளார். மீண்டும் வெள்ளியன்று மாலை திரும்பி வந்தார். வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் கதவு தாழ் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி  அடைந்தார். வீட்டினுள்ளே சென்று பார்த்தபோது பீரோ  கதவு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த 18 சவரன் நகை  மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப் பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக திருப்பூர் மத்திய  காவல் நிலையத்தில் அமர்சிங் புகார் அளித்தார். இதன்  பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மத்திய காவல் நிலைய  போலீசார் கை ரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை  சேகரித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

ரூ.5 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு

திருப்பூர், ஜூன் 24 – திருப்பூர் மாவட்டம் உடு மலைப்பேட்டை வட்டம் ஆண்டியக்கவுண்டனூரில் உள்ள ஜம்பலப்பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 32  ஏக்கர் 87 சென்ட் புஞ்சை நிலம் அதே கிராமத்தில் உள் ளது. இதனை 10 பேர் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்து அனுப வித்து வந்துள்ளனர். திருப் பூர் இந்துசமய அறநி லையத்துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் சட்டப்பிரிவு 78-ன் கீழ் வெளி யேற்ற உத்தரவு பிறப்பிக் கப்பட்டது. இதையடுத்து, வருவாய்த்துறை, காவல்து றையினர், துறை செயல்  அலுவலர்கள் மற்றும் ஆய் வர்கள் முன்னிலையில் அந்த கோயில் நிலத்தில் இருந்து 10 பேரை வெளி யேற்றி அந்த நிலத்தை  நிர்வாகம் கையகப்படுத்தி யது. இதன் மொத்த மதிப்பு  ரூ. 5 கோடி என அதிகாரிகள்  தெரிவித்தனர்.

திருப்பூர் அருகே குடிநீர் தட்டுப்பாடு:  காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

திருப்பூர், ஜூன் 24- திருப்பூர் அருகே நாச்சிபாளையம் ஊராட்சி வண்ணாந் துறை புதூரில் சீரான குடிநீர் விநியோகிக்க வலியுறுத்தி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடு பட்டனர். வண்ணாந்துறைப்புதூர் கிராமத்தில் சுமார் 100 குடும்பங் கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் 20 நாட்களுக்கு  ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படு கிறது. அவ்வாறு விநியோகம் செய்யும் குடிநீரும் கழிவுநீர்  கலந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட் டுகின்றனர். எனவே தூய்மையான குடிநீரை சீராக விநியோகம் செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தங்கள் குடும்பத்தா ருடன் திருப்பூர் காங்கேயம் நெடுஞ்சாலையில் காலி குடங் களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவினாசிபாளையம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அதிகாரிகள் வந்தால் மட்டுமே  போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்து பொதுமக் கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் கோவிந்தராஜ் சம்பவ இடத் திற்கு வந்து உடனடியாக குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப் படும் என உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள்  போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

காவல் உதவி ஆய்வாளர் தேர்வு

திருப்பூர், ஜூன் 24- திருப்பூர் அங்கேரிபா ளையம் சாலையில் உள்ள  கொங்கு வெள்ளாளர் மெட்ரி குலேஷன் மேல்நிலைப் பள்ளி மற்றும் பிஷப் உபகார சாமி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆகிய இடங்களில் சனியன்று (இன்று) காலை  10 மணிக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு  வாரியம் நடத்தும் காவல் உதவி ஆய்வாளர் (தாலுகா மற்றும் ஆயுதப்படை)ஆகி யவற்றிற்கான எழுத்து தேர்வு நடைபெறுகிறது. தமிழ்மொழி தகுதித் தேர்வு பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு

7 வாகனங்கள் தகுதிநீக்கம்

உதகை, ஜூன் 24-  நீலகிரியில் 164 தனியார் பள்ளி வாக னங்களை ஆய்வு செய்யப்பட்டன. இதில் 7 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப் பட்டது.  நீலகிரி மாவட்டம், உதகை அரசு கல்லூரி மைதானத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணிகள் வெள்ளியன்று தொடங் கின. வழக்கமாக ஜூன் மாதத்தில், பள்ளிக் கூடங்கள் திறப்பதற்கு முன்னர், மே மாதம் இந்த பணிகள் நடக்கும். இந்த முறை கொரோனா பரவல் காரணமாக பள்ளி  வகுப்புகள் மற்றும் தேர்வுகள் தள்ளிப் போனதால் ஆய்வு பணிகள் தற்போது தாமத மாக தொடங்கப்பட்டு உள்ளன. இந்த பணி களை மாவட்ட ஆட்சியர் அம்ரித், வட்டார போக்குவரத்து அதிகாரிகள், வாகன ஆய் வாளர்கள் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த ஆய்வில் நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர் ஆகிய வட்டார போக்கு வரத்து கழக எல்லைக்குட்பட்ட தனியார் பள்ளிகளை சேர்ந்த 345 பள்ளி வாகனங் கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இதில், முதற்கட்டமாக 164 வாக னங்கள் வெள்ளியன்று ஆய்வு செய்யப்பட் டது. இதேபோல் டிரைவர்கள் மற்றும்  உதவியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப் படும். கொரோனா பரவல் மீண்டும் அதிக ரித்து வருவதால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத் தப்பட்டது. கூடலூரில் 90 பள்ளி  வாகனங்க ளும் மீதமுள்ள பகுதியில் உள்ள பள்ளி வாக னங்களும் ஓரிரு நாளில் ஆய்வு செய் யப்பட உள்ளது. இதேபோல் குறைபாடுகள் இருந்த 7 வாகனங்களை தகுதி நீக்கம் செய் யப்பட்டது. இந்த ஆய்வில் வட்டாரப் போக் குவரத்து அலுவலர் தியாகராஜன், வாகன ஆய்வாளர் விஜயா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அர்ஜூனன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க திட்டம்

கோவை, ஜூன் 24- கோவை கவுண்டம்பா ளையத்தில் 2 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் தயா ரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இதற்கான ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையா ளர் மு.பிரதாப் தெரிவித்துள் ளார். கோவை கவுண்டம்பா ளையத்தில் உள்ள பழைய குப்பை கிடங்கில் தற்போது ஒரு மொவாட் மின்சாரம் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு ரூ.12 கோடி செலவில் கூடுத லாக 2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற் காக அங்கு 7.6 ஏக்கர் பரப்ப ளவில் 5 ஆயிரத்து 333  சூரிய ஒளி தகடுகள் பொருத் தப்பட உள்ளன. இத்திட்டத் தின் மூலம் மாநகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் மின் கட்ட ணம் மிச்சமாகும் எனவும்  ஆணையர் மு.பிரதாப் தெரி வித்துள்ளார்.