சேலம், ஆக.31- மேட்டூர் அருகே 3 மாத கர்ப்பிணி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள் சாலை மறி யலில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த சோரகை பகுதியைச் சேர்ந்த பழனி என் பவருக்கும், எடப்பாடியைச் சேர்ந்த சந் தியா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் நடைபெற் றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. 3 மாத கர்ப்பமாக இருந்த சந்தியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண் டார். இதுகுறித்து தகவலறிந்த நங்க வள்ளி போலீசார் விரைந்து சென்று சந் தியாவின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக மேட்டூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய் தனர். மேலும், திருமணமாகி 3 ஆண்டு கள் ஆவதால், மேட்டூர் உதவி ஆட்சியர் தணிகாசலம் விசாரணைக்கு பரிந்துரை செய்தனர். இந்நிலையில், உதவி ஆட்சி யர் அலுவலகத்துக்கு வந்த சந்தியா வின் உறவினர்கள், அவரது உயிரிழப் பில் சந்தேகம் இருப்பதாகக்கூறி, மேட் டூர் உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மேட்டூர் உதவி ஆட்சியர் தணிகாசலம், துணை காவல் கண்காணிப்பாளர் சங்கீதா, ஆய் வாளர்கள் சுப்ரமணி, ஆனந்தராஜ் ஆகி யோர், சந்தியாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்த்தை மேற்கொண்டனர். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதி காரிகள் உறுதியளித்தனர். அதன்பிறகு கலைந்து சென்றனர்.