திருப்பூர், மே 1- கோகுல்ராஜ் கொலை வழக்கு உள்ளிட்ட சாதி ஆணவப் படுகொலை களுக்கு வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புக்கு காங்கயத்தில் பாராட்டு விழா சனியன்று மாலை நடைபெற் றது. காங்கயம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத் தில் நடைபெற்ற இந்தக் கூட்டத் துக்கு தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ச.கருப்பையா தலைமை வகித்தார். இதில், தமிழ கத்தில் திருச்செங்கோடு பொறியா ளர் கோகுல்ராஜ் சாதிய ஆணவப் படுகொலை, சேலம் பள்ளிச் சிறுமி ராஜலெட்சுமி தாயின் கண் முன்பாக தலை வெட்டி எடுத்துச் செல்லப் பட்ட கொடூரக் கொலை, கரூரில் சமூக ஆர்வலரும், அவரின் மகனும் திட்டமிட்டு சமூக விரோதிகளால் நிகழ்த்தப்பட்ட படுகொலை ஆகிய சம்பவங்களில் நீதிமன்றம் சமூக நீதியைப் பாதுகாத்து, குற்றவாளி களுக்கு கடுமையான தண்டனை வழங்கியதற்கு இக்கூட்டத்தில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. இதில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் கோகுல்ராஜின் குடும் பத்தினர் வேண்டுகோளை ஏற்று ஆஜரான வழக்குரைஞர் ப.பா.மோகன், சங்கர் சமூகநீதி அறக் கட்டளை நிர்வாகி கௌசல்யா, தற் சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கி.வே.பொன்னையன், புரட்சிகர இளைஞர் முன்னணியின் காங்கயம் நிர்வாகி கவி உள்ளிட்டோர் உரை யாற்றினர்.மேலும் இதில், முரசர் அறக்கட்டளை நிர்வாகி குணசேக ரன், தற்சார்பு விவசாயிகள் சங்கத் தின் துணைத் தலைவர் திருமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் அங்கப்பன், காங்கிரஸ் கட்சியின் காங்கயம் நக ரத் தலைவர் சிபகத்துல்லா, புரட்சி கர இளைஞர் முன்னணியின் காங்க யம் பொறுப்பாளர்கள் ப.கண்ணு சாமி, கோபால் உள்பட 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.