districts

img

நூறு நாள் வேலை திட்டத்தில் ரூ.11 ஆயிரம் கோடி பாக்கி

திருப்பூர், ஜூலை 11– நூறு நாள் வேலை திட்டத்திற்கு வழங்க வேண்டிய ரூ.11ஆயிரம் கோடியை ஒன்றிய அரசு இன்னும் தராமல் நிறுத்தி வைத்துள் ளது என பி.ஆர்.நடராஜன் எம்பி., குற்றம் சாட்டினார். மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து மக்க ளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு அந்தந்த பகுதிகளில் அவர் உரை யாற்றினார். அப்போது அவர் கூறுகையில், ஒன்றிய, மாநில அரசுகளிடம் மக்கள் என்ன கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள் என் பதை அறிந்து அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதற்காக இந்த மக்கள் சந்திப்பு கோரிக்கை மனுப் பெறும் இயக்கம் நடத்தப் படுகிறது. இடுவாய் ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்டப்பணி மறுக்கப்படாமல் வழங்கப்படு வதை அறிந்தேன். அரசு நிர்ணயித்த ஊதி யமும் வழங்கப்படுகிறது.

இங்கு ஒரு மாத  ஊதியம் நிலுவையில் உள்ளது. தமிழ்நாட்டி லேயே நூறு நாள் வேலை திட்டத்தில் மிக  அதிக வேலை தருவது திருப்பூர் மாவட்டம் தான் என்பது பெருமைக்குரிய விசயம்.அதே சமயம் ஒன்றிய அரசு இந்த திட்டத்துக்குத் தர வேண்டிய ரூ.11ஆயிரம் கோடியைத் தரா மல் நிறுத்தி வைத்திருக்கிறது. இதனால் எட்டு மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளன. அத்தோடு நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துவிட்டது. இதனால் தொகுதியில் தேவைப்படும் பணிகளுக்கு உரிய பணம் ஒதுக்க முடியாத நிலை உள்ளது. வரக்கூடிய 18 ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குகிறது. அதில் நூறு நாள் வேலை திட்டம் மற்றும் எம்.பி. தொகுதி வளர்ச்சி நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி போராடுவோம். பல இடங்களிலும் குப்பை மலை போல் தேங்கியிருக்கிறது. குப்பைப் பிரச் சனை தீர்வு காண வேண்டிய பெரும் பிரச்ச னையாக மாறியுள்ளது. குப்பையை அகற்றி கொட்டி வைப்பதற்கு பெரிய இடம் தேவைப் படுகிறது. அத்துடன் குப்பைகளைத் தரம் பிரித்து மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ் டிக்குகளை இதர உபயோங்களுக்குப் பயன்படுத்தலாம்.

பள்ளி கல்விக் கோரிக்கை

செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அரசுப் பள்ளிக்கூடங்களுக்கு கூடுதல் வகுப் பறை, காலி ஆசிரியப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், வீட்டுமனைப் பட்டா வேண்டும், ஒரு லட்சம் லிட்டர், 60 ஆயிரம் லிட்டர் மேல் நிலை தொட்டி வேண்டும் என கோரிக்கை கள் வைக்கின்றனர். பல்வேறு பள்ளிக் கட்டி டங்கள் கட்டப்பட்டு 70 ஆண்டுகளுக்கு மேல்  ஆகின்றன. இந்த பள்ளி கட்டிடங்களை சீர மைப்பதுடன், புதிய வகுப்புறை கட்டிடங்க ளும் அதிகளவில் கட்ட வேண்டிய தேவை  உள்ளது. அதுவும் இந்த கல்வி ஆண்டில் பல  லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளியில் வந்து சேர்ந்துள்ள னர். அவர்கள் கல்விக்குத் தேவையான  அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டியுள் ளது. இதற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தேவைப்படும். ஆனால் எம்.பி. தொகுதி நிதி ரூ.4.10 கோடி ஒதுக்குவதில் பள்ளிகளை முழுமையாக சீர மைத்து புதிய வகுப்புறை கட்டிடங்கள் கட்டு வது சாத்தியமில்லை. எனவே கோவைக்கு  வரவுள்ள முதல்வரை சந்தித்து இந்த கோரிக் கைகள் குறித்து மனுக் கொடுப்பேன். இத் துடன் மக்கள் கொடுத்துள்ள கோரிக்கை களில் முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்கி வேலை செய்யப்படும் என்றும் பி.ஆர்.நடராஜன் தெரிவித்தார். முன்னதாக இந்த மக்கள் சந்திப்பு, வளர்ச் சிப் பணிகள் ஆய்வின்போது, மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆணையர் கிராந்தி குமார் பாடி, துணை மேயர் பாலசுப்பிரமணி யம், இடுவாய் ஊராட்சிமன்றத் தலைவர் கே. கணேசன், மங்கலம் ஊராட்சித் தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி மற்றும் மாமன்ற உறுப் பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனி ருந்தனர்.