கோவை, செப். 2 - கிராமப்புற அரசு பள்ளிகளில் இணைய சேவை வழங்குவது குறித்து நாடாளுமன்ற தொகுதி மேம் பாட்டு நிதியின் விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள இருப்ப தாக கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித் தார். கோவை மாவட்ட தொலை தொடர்பு ஆலோசனை கூட்டம் சாய் பாபா காலனியில் உள்ள டெலிகாம் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமை தாங்கினார். பிஎஸ்என்எல் கோவை மண்டல பொது மேலாளர் பால் வண்ணன் வரவேற்றார். துணை பொது மேலாளர் (நிர்வாகம்) ஜோபின் ஜோசப் பிஎஸ்என்எல் வழங்கி வரும் பல்வேறு சேவைகள் குறித்து விவரித்தார். இதில், மாவட்ட தொலைதொடர்பு ஆலோசனை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பல் வேறு ஆலோசனைகளை முன் வைத்தனர். முன்னதாக இக்கூட்டத்தில் பி.ஆர்.நடராஜன் எம்பி., பேசுகை யில், கிராமப்புற பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவைகளை மேம்படுத்துவது குறித்தும், இணைய சேவை கிடைக்கப் பெறாத மலைக் கிராமங்களில் 4 ஜி சேவை வழங்க தற்போது பணி கள் நடைபெற்று வருகின்றது. கிராமப்புற பள்ளிகளில் இணைய சேவை வழங்க நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி விதிகளுக்கு உட்பட்டு நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளதாகவும், பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தைபாது காக்க அனைவரும் முன்வர வேண்டும், தமிழ்நாடு அரசு தனது அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளி, கல்லூரிகளில் பி.எஸ்.என் எல் மூலம் அதிவேக இணைய சேவையை பயன் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், வேண்டுகோளை முன் வைத்தார். இக்கூட்டத்தில் மாவட்ட தொலை தொடர்பு ஆலோசனை குழு உறுப்பினர்கள் கே.எஸ்.கனகராஜ், ஆர்.கோபால், தெய்வேந்திரன், கேசவமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.