districts

img

கோவை எம்.பி.,யின் முயற்சியில் புதிய பாலங்கள்

கோவை, ஜன.2- கோவையில் புதிதாக கட்டபட வுள்ள மேம்பால பகுதிகளை மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன், நெடுஞ்சாலைத்துறை அதிகா ரிகளுடன் நேரில் ஆய்வு மேற் கொண்டார். மேட்டுபாளையம் சாலை, கடும்  போக்குவரத்து நிறைந்த சாலை யாக இருந்து வருகிறது. இங்கு  மேம்பாலம் கட்ட வேண்டும் என  பொதுமக்கள் பல நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நி லையில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனின் தொடர் முயற்சியால், புதிய மேம் பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. கோவை சிவானந்த  காலனி அருகே உள்ள மேட்டுப்பா ளையம் சாலையில் இப்புதிய மேம் பாலம் அமையவுள்ளது. சுமார்  59.93 கோடி ரூபாய் செலவில்,  975 மீட்டர் நீளம் அமையவுள்ள இப் பாலம், கங்கா மருத்துவமனை அடுத்த ஏ.ஆர்.சி சந்திப்பில் துவங்கி  மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பேருந்து நிலையத்தை தாண்டி முடிவடையுள்ளது. புதிய  மேம்பாலத்திற்கான கட்டுமான பணிகள் அடுத்த ஒருசில மாதங்க ளில் துவங்கப்படவுள்ள நிலையில், பாலம் கட்டப்படும் பகுதிகளை எம்.பி., பி.ஆர்.நடராஜன் ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளிடம் தகவல்களை கேட்டறிந்தார். இரண்டு ஆண்டுகளில் கட்டு மான பணிகளை முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள் ளதாக நெடுஞ்சாலைத்துறை உயர்  அதிகாரிகள் தெரிவித்தனர்.  அதேபோன்று, கோவையிலி ருந்து மதுக்கரை வழியாக பாலக் காடு செல்லும் பிரதான சாலை யில் உள்ள ரயில்வே தரைப்பாலம் பகுதி, நெரிசல் மிகுந்த பகுதியாக  உள்ளது. எனவே, அப்பாலத்தை விரிவுபடுத்த கோரி, அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியு றுத்தி வந்தனர். இந்த நிலையில்  பி.ஆர்.நடராஜன் எம்.பியின் முன் முயற்சியில் பாலக்காடு பிரதான சாலையில் போக்குவரத்து நெரி சலை குறைக்கும் வகையில், அப்ப குதியில் புதிய தரைப்பாலம் கட்ட  திட்டமிடப்பட்டுள்ளது. தரைப்பா லம் அமையவுள்ள பகுதியையும் பி.ஆர்.நடராஜன் எம்.பி., நெடுஞ் சாலைதுறை உயர் அதிகாரி ளுடன் இணைந்து ஆய்வு மேற் கொண்டார். இந்த ஆய்வின் போது கவுண் டம்பாளையம் சட்டமன்ற உறுப்பி னர் பி.ஆர்.ஜி.அருண்குமார், கோவை வடக்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அம்மன் கே.அர் ஜுனன், கோவை மாநகராட்சி துணைமேயர் ரா.வெற்றிசெல்வன், மற்றும் நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரிகள் பலர் உடனி ருந்தனர்.