கோவை, செப்.15- பெண்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தியாவிலேயே முன் னோடி அரசு என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரி வித்தார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா வின் சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் வெள்ளியன்று துவக்கி வைத்தார். இத னைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங் களிலும் மகளிர் உரிமைத் தொகை வழங் கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்ஒரு பகுதியாக, கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற் றது. இதில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரி யத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் பங்கேற்று பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை துவக்கி வைத்த னர்.
இதன்பின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசுகை யில், பெண்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு இந்தியாவிலேயே முன்னோடி யாக இருந்து வருகிறது. நகரப் பேருந்து களில் மகளிர் கட்டணமின்றி பயணிக் கும் திட்டம், அரசு பள்ளிகளில் பன்னி ரண்டாம் வகுப்பு முடிக்கும் மாணவி களுக்கு உதவித்தொகை என பெண் களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. தற்போது உழைக்கும் மக ளிருக்கான உரிமைத்தொகையை அறி வித்து செயல்பாட்டுக்கு கொண்டு வந் திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே போல அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தால் பசியோடு பள்ளிக்கு வரும் குழந்தைகள் வயிறார சாப்பிட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்தும் சூழல் உரு வாகி இருக்கிறது, என்றார். முன்னதாக, கலைஞர் மகளிர் உரி மைத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு, சு.முத்துசாமி ஏடிஎம் அட்டை மற்றும் மகளிர் உரிமை கையேடுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மதுக்கரை வட் டாரம், சீரபாளையம் கற்பகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடை பெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் துவக்க விழாவில், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்பாடி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஆர்.நடராஜன், மாநகராட்சி ஆணை யர் மு.பிரதாப் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
ஈரோடு
ஈரோடு, திண்டல் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட துவக்கவிழாவிற்கு, ஆட் சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். இதில், அமைச்சர் சு.முத்து சாமி பங்கேற்று சிறப்புரையாற்றினார். முன்னதாக இந்நிகழ்வில், மாநிலங்க ளவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வ ராஜ், மாநகராட்சி மேயர் சு.நாகரத்தி னம், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், மாவட்ட வரு வாய் அலுவலர் ச.சந்தோஷினி சந்திரா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் பங்கேற்று அமைச்சர் சு. முத்துசாமி பேசுகையில், ஈரோடு மாவட் டத்தில் மொத்தமாக 5 லட்சத்து 38 ஆயி ரத்து 645 விண்ணப்பங்கள் பெறப்பட் டது. அதில் தற்போது, 2 லட்சத்து 16 ஆயி ரத்து 439 மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. விண்ணப்பம் வழங் கிய தகுதி வாய்ந்த அனைவருக்கும் தொடர்ந்து உரிமைத்தொகை வழங்கப் படும் என்றார்.
சேலம்
சேலம் மாவட்டத்தில் குரும்பப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1250 பயனாளிகளுக்கும், சேலம் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச் சியில் 1250 பயனாளிகளுக்கும் மக ளிர் உரிமைத்தொகை வழங்கும் திட் டத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச் சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார். சேலம் மாவட்டத்தில் 11 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் 6 லட்சம் மகளிர் விண்ணப்பித்துள்ளனர். மீத முள்ளவர்களின் தகுதியான மகளிர் இருந் தால் அவர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் உரிமைத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சி யர் செ.கார்மேகம், மாநகராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆர்.ராஜேந்தி ரன், ஆர்.அருள், எஸ்.சதாசிவம், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.மேனகா உட் பட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் இதேபோன்று நாமக்கல் மாவட்டத் தில் நடைபெற்ற விழாவில், அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்று கலைஞர் மக ளிர் உரிமைத்திட்ட நிகழ்வை துவக்கி வைத்தார். இதில், மாவட்ட ஆட்சியர் ச.உமா உள்ளிட்ட திராளானோர் பங் கேற்றனர்.
மேல் முறையீடு செய்ய அழைப்பு
தகுதியான பயனாளிக்கான உரிமைத்தொகை அவர்களுக்கான வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. ஆனால், ஒரு சில மகளிருக்கு ஒருமுறை கடவுச்சொல் (ஒடிபி) எண் கேட்டு முகம் தெரியாத மோசடி நபர்களால் தொலைபேசி அழைப்புகள் வரப்பெறு வதாக தெரியவருகிறது. அவ்வாறு ஒரு முறை கடவுச்சொல் (ஒடிபி) எண் அர சால் கோரப்படுவதில்லை. இதுதொடர்பாக எவரேனும் தொலைபேசி வாயி லாக தொடர்புகொண்டால், எவ்வித தகவலும் யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி இருந்தும் உரிமைத் தொகை கிடைக்கப்பெறாதவர்கள் 30 தினங்களுக்குள் மீண்டும் வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு மனு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.