கோவை, பிப்.16- இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர்.கிருஷ்ணமாச்சாரி எழுதிய ”மக்கள் போராட்டங்கள் ஷெல்லி யின் கண்ணோட்டம்” என்கிற நூல் வெளியீட்டு விழா கோவையில் நடை பெற்றது. தென்மண்டல இன்சூரன்சு ஊழி யர் சங்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர்.கிருஷ்ணமாச்சாரி, தனது முனைவர் பட்டத்திற்காக சமர்பித்த ஆய்வுக்கட்டுரையை நூலாக வெளியிட்டுள்ளார். ”மக்கள் போராட்டங்கள் ஷெல் லியின் கண்ணோட்டம்” என்கிற தலைப்பில் வெளிவந்துள்ள இந் நூல் வெளியீட்டு விழா கோவை சரோஜ் நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கலந்து கொண்டு நூலை வெளி யிட, இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தின் மூத்த தோழர் ஏ.ஆர்.கல்யா ணசுந்தரம் பெற்றுக்கொண்டார். நூலை தமிழாக்கம் செய்த ஓய்வு பெற்ற அதிகாரி ரமணன் புத்தகத்தை அறிமுகம் செய்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், தென்மண்டல இன்சூரன்சு ஊழியர் கூட்டமைப்பின் துணைத்தலைவரும், சேலம் கோட் டச்சங்கத்தின் தலைவர்களில் ஒருவ ருமான தர்மலிங்கம், தென்மண்டல இன்சூரன்சு ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் க.சுவாமிநாதன் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.