districts

img

ஆறாக்குளம் அருந்ததியர் குடியிருப்பு

திருப்பூர், ஏப்.16- பல்லடம் தாலுகா ஊராட்சிக்கு உட்பட்ட  ஆறு குளம் அருந்ததியர் குடியிருப்பில் கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் நேரில் ஆய்வு மேற்கொண் டார். பல்லடம் தாலுகா, பருவாய் கிராமம் ஆறா குளத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி அருந்ததியர் மக்கள் வசிக்கின்ற  பகுதி தற்போது குட்டை புறம்போக்கு என வகைப்பாட்டில் இருப்பதாக கூறி வீடுகளை  காலி செய்ய வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த பகுதி குட்டையாக இருப்பதற்கு எந்த அறிகுறியும் இல்லாமல் சமதளப் பகுதியில் தனியார் லே-அவுட்கள் போல முறையாக ரோடுகள், சாக்கடை வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப் பட்டு வீடுகள் கட்டப்பட்டிருக்கிறது.  

பருவாய் ஊராட்சியின் சார்பாக தற் போது 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் அங்கன்வாடி மற்றும் குடிநீர் மேல்நிலை தொட்டி ஆகியவை ஏற்படுத்தப் பட்டு நீண்டகாலமாக மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் தற்சமயம் இவை குட்டை புறம்போக்காக  இருப்பதால் வீடு களை காலி செய்து விடுவார்களோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சனியன்று மதியம் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து விவரங்களை கேட்டறிந்தார். எவ்வகையிலும் இந்த பகுதி மழைநீர் வரு வதற்கான எந்த சாத்தியமும் இல்லாமல் இருக்கிற சூழலில், வீடுகளை காலி செய் வதை ஏற்க முடியாது என்று கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக உடனிருந்து மாவட்ட நிர்வாகத்திடம் பேசி தக்க மாற்று ஏற்பாடுகளை செய்வதாகவும் கூறினார்.  இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.  முத்துக்கண்ணன், பல்லடம் ஒன்றிய செயலா ளர் ஆர்.பரமசிவம், காங்கிரஸ் கட்சியின் முன் னாள் வட்டார தலைவர் ஆறாக்குளம் ரவி உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் பங்கேற் றனர்.