பள்ளிபாளையம், மே 22-
நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்க குமாரபாளைய நகர 17 ஆவது மகாசபை, குமாரபாளையம் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு விசைத்தறி சங்கத்தின் நகர தலைவர் சரவணன் தலைமை ஏற்றார்.
மாவட்ட தலைவர் கே.மோகன் துவக்க உரையாற்றினார். வேலை அறிக்கையை நகர செயலாளர் கே. பாலுசாமி சமர்ப்பித்தார். வரவு- செலவு அறிக்கையை நகர பொருளா ளர் எத்திராஜ் முன்மொழிந்தார். இதில், உழைப்பாளி மக்களின் நலன் காக்க 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாட்டில் 7 முனைகளில் இருந்து நடைபயண பிரச்சாரம் மற்றும் மே 30 ஆம் தேதியன்று திருச்சியில் பேரணி, பொதுக் கூட்டத்தில் திரளாக பங்கேற் பது என தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.
இதைத்தொடர்ந்து சங்கத்தின் தலை வராக ஜே.எஸ் சரவணன், செயலாள ராக பாலுசாமி, பொருளாளராக வெங்க டேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயலாளர் எம்.அசோகன் நிறைவுரையாற்றினார். நகர உதவிச்செயலாளர் மோகன் நன்றி கூறினார்.