districts

img

கூலி உயர்வு வழங்கிடுக: விசைத்தறி தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

நாமக்கல், ஆக. 28- விசைத்தறி தொழிலாளர்க ளுக்கு ஒப்பந்தபடி கூலி உயர்வு வழங்க உரிய தலையீட்டை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என சிஐடியு விசைத்தறி தொழிலாளர் மாவட்ட மகாசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  நாமக்கல் மாவட்டம், குமாரபா ளையம் பொன் செல்லம்மாள் திரு மண மண்டபத்தில், நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின்  22 ஆவது மகாசபை கூட்டம் ஞாயி றன்று நடைபெற்றது. இந்த நிகழ் விற்கு சங்க மாவட்டத் தலைவர் கே. மோகன் தலைமை வகித்தார். சங்க  முன்னாள் தலைவர் ஆறுமுகம் கொடி யேற்றி மாநாட்டை தொடங்கி வைத் தார். சங்க மாவட்ட துணைத்தலைவர் கே.பாலுசாமி வரவேற்புரையாற்றி னார். சிஐடியு விசைத்தறி தொழிலா ளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம். சந்திரன் மாநாட்டை துவக்கிவைத்து உரையாற்றினார். வேலை அறிக் கையை சங்க செயலாளர் எம்.அசோ கன், வரவு,செலவு அறிக்கையை முத் துக்குமார் ஆகியோர் முன்மொழிந்த னர்.  இதில், குமாரபாளையம் பள்ளி பாளையம் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு போடப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தத்தை முழுமை யாக நடைமுறைப்படுத்த வேண்டும். பள்ளிபாளையம், குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் தேவை யான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர் பற்றாக்குறையை சரிசெய்திடவும், பரிசோதனை கருவி களை அமைத்து, உயிர்காக்கும் மருந் துகளை கிடைத்திட உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் தலைவராக கே.மோகன், செயலாளராக எம். அசோகன் பொருளாளராக எஸ். முத்துக்குமார், துணைத் தலைவர்க ளாக செந்தில்குமார், அசன், துணைச் செயலாளராக பாலுசாமி, அங்கமுத்து, ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 19 பேர் கொண்ட நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது. சிஐடியு மாவட்டச் செயலாளர் நா.வேலுச்சாமி மாநாட்டை நிறைவு செய்து உரை யாற்றிறனார். முன்னதாக, மாநாட் டையொட்டி மாலையில் நடைபெற்ற  பேரணி, பொதுக்கூட்டத்தில் நூற்றுக் கணக்கான விசைத்தறி தொழிலாளர் கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.