கோயம்புத்தூர், மார்ச் 12 - கோவையில் மே மாதத்தில் தமிழ்நாடு மின் வாரிய உழைக்கும் பெண்கள் ஒருங்கினைப்புக்குழுவின் 10 ஆவது மாநில மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டை வெற்றிகரமாக்குவதற்கென வரவேற்புகுழு அமைப்புக்கூட்டம், கோவையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு எஸ்.கலைச்செல்வி தலைமை ஏற்றார். ஜீ. கோகிலவாணி வரவேற்புரையாற்றினார். மாநாட்டின் நோக்கங்களை விளக்கி தமிழ்நாடு மின்வாரிய உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் துணை அமைப்பாளர்கள் எம்.சாலட், ஏ.விஜயலட்சுமி ஆகியோர் உரையாற்றினர். தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் தி.ஜெய்சங்கர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் டி.சுதா ஆகியோர் வாழ்த்தி உரையாற்றினர். மின் ஊழியர் மத்திய அமைப்பின் கோவை மண்டலச்செயலாளர் து.கோபாலகிருஷ்ணன் மாநாட்டின் தயாரிப்பு பணிகள் குறித்து உரையாற்றினார். முன்னதாக, வரவேற்பு குழுவுக்கு எம்.கிரிஜா தலைவராகவும், எஸ்.கலைச்செல்வி செயலாளராகவும், ரூபிதா பொருளாளராகவும் மற்றும் 40 பேர் கொன்ட நிர்வாக குழு, 90 பேர்கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. தமிழ்நாடு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர், எஸ் இராஜேந்திரன் மாநாட்டை வெற்றி பெற வைக்க வேண்டிய அவசியம் குறித்து நிறைவுரையாற்றினார்.