districts

img

தொழிலாளர் விரோத பாஜகவை அகற்றுவோம்! விசைத்தறி, வெள்ளிக்கொலுசு தொழிலாளார்கள் முடிவு

பாஜக ஆட்சியில் வெள்ளி மற்றும் ஜவுளி தொழில் முழுமையாக பாதித்துள்ளது. எனவே, நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் தொழிலாளர்கள், இந்தியா கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். பாஜக மோடி அரசு, கடந்த 10 ஆண்டுகாலம் சிறு, குறு தொழில்களுக்கு முழுமையாக பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளது. குறிப்பாக, ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலம் அனைத்து வித தொழில்களின் மூலப்பொருட்களுக்கும் தனித்தனியே வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பாரம்பரிய தொழில்களுக்கு முழுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அழிவின் விளிம்பில் விசைத்தறி, கைத்தறி

சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற விசைத்தறி மற்றும் கைத்தறி தொழில்கள் கடந்த 10  ஆண்டுகளில் கற்பனைக்கு எட்டாத  அளவிற்கு அழிவின் பிடியில் இருப் பதாக தறி தொழிலாளர்கள் குற்றஞ் சாட்டி வரும் நாடாளுமன்றத் தேர்த லில் பாஜகவை வீழ்த்த முடிவு செய் துள்ளனர். சேலம் மாவட்டத்தில் இளம்பிள்ளை, தாரமங்க லம், அம்மாபேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிக ளில் விசைத்தறி தொழில் மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த தொழிலை நம்பி இருந்து வரும் நிலையில், ஒன் றிய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளின் காரணமாக இன்று இந்த தொழில் கேள்விக்குறியாக மாறியுள்ளது. விசைத்தறியை காட்டிலும் கைத்தறி தொழில் தற்போது இறுதி விளிம்பில் அழிவின் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறதெனெ தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். குடிசைத் தொழில் மற்றும் சிறு, குறு நிறுவனங்களாக செயல்பட்டு வந்த விசைத்தறிக்கூடங்கள் தற் போது கார்ப்பரேட்டுகளின் கையில் சென்று ஜவுளித்தொழில் முழுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது. சாதா ரண தறி கூடங்களில் தயாரிக்கப் படும் பொருட்களுக்கு தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, விசைத்தறி தொழிலுக்கு பயன்படும் நூல் உள்ளிட்ட மூலப்பொருட்களுக்கு தனித்தனியே ஜிஎஸ்டி வரி விதிப்பின் காரணமாக இன்று தறிக்கூடங் கள் முழுமையாக மூடப்பட்டுள்ளது. விசைத்தறி நெச வாளர்கள் பெரும் கடன் தொகையை 45 நாட்களில் கொடுக்காவிட்டால் 30 சதவிகிதம் வட்டி என வசூலிக் கப்படுவது காரணமாக பெரும் இழப்பை சந்தித்து வரு கின்றனர். செயற்கை யான்கள் வந்த பிறகு குஜராத் மாநி லத்தில் உற்பத்தியாகும் சேலைகள்தான் அதிகளவில் வருகிறது. அதானி, அம்பானிக்கு நெசவுத்தொழிலை குத்தகைக்கு மோடி அரசு கொடுத்துவிட்டது என விசைத் தறி தொழிலாளர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

புகழ்பெற்ற வெள்ளி தொழில் முடங்கிய அவலம்

சேலம் மாவட்டத்தில் செவ் வாய்பேட்டை, குகை, லயன் மேடு, பனங்காடு, சிவதாபுரம், மணி யனூர் உள்ளிட்ட பகுதிகளில் 50  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள் ளிக்கொலுசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உலக அள வில் சேலம் வெள்ளிக்கொலுசுக்கு தனி மதிப்பு உண்டு. மற்ற இடங்க ளில் கொலுசு தயாரிக்க நவீன கருவிகள் பயன்ப டுத்தப்பட்டு வருகிறது. ஆனால், சேலத்தில் பெரும்பா லான இடங்களில் தற்போதும் கைகளால் கொலுசு செய்வது தான் மிக முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு மாதமும் சராசரியாக 50 டன் அளவிற்கு கொலுசு உள்ளிட்ட வெள்ளிப்பொருட்கள் தயார் செய்யப்பட்டு ஆந்திரா, கர்நாடகா, கேரளம், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. பாஜக அரசு பொறுப்பேற்ற காலம் முதல் தற் போது வரை வெள்ளி தொழில் முழு மையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒன் றிய அரசின் ஆபரண வரி உள்ளிட்ட காரணங்களால் வெள்ளி வியாபா ரம் மந்தமாக நடைபெற்று வருகிறது. மேலும், வெள்ளி தொழில் பாதிப் பால் 30 சதவிகித தொழிலாளர்கள் வேறு தொழிலுக்கு மாறியுள்ளனர். வெள்ளி மீதான 4 சதவிகித ஆபரண வரியை ஒன்றிய அரசு நீக்க வேண்டும் என்பது வெள்ளி  தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஜிஎஸ்டி வரி போட்ட பின்னால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பழைய வெள்ளிக்கும் வரி, புதிய வெள்ளிக்கும் வரி என்ற  இரண்டு ஜிஎஸ்டி வரிகளை மாற்ற வேண்டும். ஒன்றிய அரசின் நிலைப்பாடு பெரு முதலாளிகளுக்கு ஆதரவா கவே இருந்து வருகிறது. எனவே, புகழ்பெற்ற வெள்ளி  தொழில் அழிவிற்கு முக்கிய காரணமான ஒன்றிய பாஜக அரசை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்த்த இந் தியா கூட்டணிக்கு தங்களது ஆதரவை அளித்துள்ள னர் வெள்ளிக்கொலுசு தொழிலாளர்கள்.

சேலம் மாவட்டத்தின் புகழ்பெற்ற விசைத்தறி மற்றும் வெள்ளி தொழிலாளர்கள் மத்தியில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கும் நிலையே உள்ளது. சிறு, குறு தொழில்கள் மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்கும் கோரிக்கைகளை இந்தியா கூட்டணி அறிவித்துள்ள நிலையில், அவர்களுக்கு தங்கள் ஆதரவை அளிக்க உள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.