உடுமலை, அக்.11- தமிழ்நாடு மின் வாரிய ஓய்வு பெற் றோர் நல சங்கத்தின் சார்பில் 11ஆம் தேதி செவ்வாய்கிழமை உடுமலை மின் வாரிய அலுவலகம் முன்பு மேலாடை யின்றி போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் கிளை தலைவர் பாலசுப் ரமணியம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஜெகதீசன் துவக்கி வைத்து பேசினார் . ஊழியர் சங் கத்தின் நிர்வாகிகள் வாழ்த்துரை வழங் கினர். இதைதொடர்ந்து மின் வாரிய வளர்ச்சிக்கு பாடுபட்ட ஓய்வூதியர்க ளுக்கு உடனடியாக அகவிலைப்படி வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதி படி புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்ய வேண்டும், மின்வாரிய உத்தரவு 2 ஐ ரத்து செய்ய வேண்டும், மருத்துவ காப் பீடு திட்டத்தை மின்வாரியம் ஏற்று நடத்த வேண்டும், காப்பீடு வழங்கப்ப டாத ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி மேலாடை இன்றி போராட்டம் நடைபெற்றது.