பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காங்கயம் பகுதியில் பொங்கல் பானை தயாரிக்கும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. மண்பாண்டங்களை பயன் படுத்துவதன் மூலம் இத்தொழிலும் பாது காக்கப்படுவதுடன், மக்கள் ஆரோக்கிய மும் மேம்படும் எனவே, மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என மண்பாண்ட தயாரிப்பாளர் கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதி களில் பொங்கல் பண்டிகையையொட்டி பொங் கல் பானைகள் உற்பத்தி செய்யும் பணியில் மண் பாண்ட கலைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டு வரு கின்றனர். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கிராமப்புறங்களில் சிறப்பாக கொண்டாடப் பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கு வதால், மண்பாண்ட தொழிலாளர்கள் உற்சா கம் அடைந்துள்ளனர். மண்பாண்டங்களை பெரும்பாலான கிராமங்களில் தொழிலாளர் கள் குடும்பத்துடன் செய்து வந்தனர். மண் பாண்டங்கள் தயாரிப்பதற்கு ஆங்காங்கே உள்ள குளங்களில் சேகரமாகும் வண்டல் மண்ணை எடுத்து நேர்த்தியாக செய்து வந்த னர். இதில் அகல் விளக்குகள், மண் அடுப்பு கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட் கள், வீட்டு உபயோக பொருட்கள், கோவி லில் வைக்கும் உருவார பொம்மைகள் ஆகிய வற்றை உற்பத்தி செய்கின்றனர். குறிப்பாக கார்த்திகை மாதத்தில் கார்த்திகை விளக்கு களும், தை மாதத்திற்காக பொங்கல் பானை களும் தயார் செய்கின்றனர்.
காலப்போக்கில் உணவு முறையில் ஏற் பட்ட மாற்றம் சில்வர், பிங்கான் இதர உலோ கங்களில் செய்யப்படும் பாத்திரங்களின் வர வும், நவீன ஓடுகளின் வரவு உள்ளிட்டவற் றால் மண்பாண்டத் தொழில் நலிவடையத் தொடங்கியது. தற்போது சில பகுதிகளில் அத்தி பூத்தாற்போல இந்த தொழில் நடைபெற்று வரு கிறது. காங்கேயம் அடுத்துள்ள சம்பந்தம்பா ளையத்தில் இந்தத் தொழிலில் பாரம்பரியமாக ஈடுபட்டு வரும் சிவக்குமார் கூறுகையில், நான்கு தலைமுறைகளாக எங்கள் குடும்பத்தி னர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். முன் பெல்லாம் நாங்கள் தயாரிக்கும் மண்பாண் டங்கள் அவ்வப்போது விற்றுத் தீர்ந்து விடும். ஆனால் தற்போது அலுமினியம், சில்வர் பாத்தி ரங்கள், குக்கர்கள், தண்ணீர் காய வைக்க சோலார் வாட்டர் ஹீட்டர்கள் என நவீன வரவு களால் மண்பாண்டங்கள் முக்கியத்துவத்தை இழந்துவிட்டன. சிலர் மட்டும் இன்றளவும் பானையை பயன்படுத்தி வருகின்றனர். இத னால் பெரும்பாலானோர் வேறு தொழில் களுக்கு சென்று விட்டனர். இருந்தபோதிலும் கோயில் திருவிழாக்களுக்கு தேவையான குதிரை, கருப்பராயன், கன்னிமார், அம்மன் உள்ளிட்ட சிலைகள், பொம்மைகள் செய்யப் படுகின்றன.
பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையடுத்து பொங்கல் பானைகள் உற் பத்தி செய்யும் பணிகள் நடக்கிறது. இதில் 5 கிலோ வரை அரிசி பொங்கல் வைக்கும் பானைகள் தயார் செய் யப்படுகிறது. இதில், அரை கிலோ பானை ரூ.100, முக்கால் கிலோ பானை ரூ.150, ஒரு கிலோ பானை ரூ. 200, 3 கிலோ பானை ரூ.250க்கும், குடம் உள்பட பெரிய பானைகள் 300 ரூபாய் வரை விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். தற்போது பெரும் பான்மையான குளங்கள் தூர் வாரப் பட்டு விட்டதால் மண் கிடைப்பது சிரம மாக இருக்கிறது. மேலும் பக்கத்தில் உள்ள பகுதியில் இருந்து மண் எடுத்து வருவதில் சில சட்ட சிக்கல் உள்ளது. அனைத்து பகுதியிலிருந் தும் மண் எடுக்கலாம் என அர சாணை வெளியிட வேண்டும். அரசு பொங்கல் தொகுப்பில் தர ரேசன் கடைகளில் பானைகள் தரும் போது போக்குவரத்தின்போது பானைகள் உடைய வாய்ப்புள்ளது. அரசு அறிவிக்கும் திட்டம் பெரிய அளவில் தொழில்கூடம் வைத்து நடத்துபவர்களுக்கு செல்லும். கிராமப்புற மண்பானை தயாரிக்கும் தொழி லாளர்கள் வாழ்வாதரம் மேம்பட வேண்டும் என்றால், கிராமத்தில் இருந்து வாங்கி மக் கள் பொங்கல் வைக்கலாம். பொங்கல் 3 நாட்கள் வருகிறது, ஒரு நாளாவது மண் பானையில் பொங்கல் வைத் தால் விற்பனை அதிகமாகும், எங் கள் வாழ்வாதாரமும் பெருகும். அதே சமயம், மண் பானை களை பொதுமக்கள் வாங்கி கிராம தொழி லையும், மண்பான்ட தொழிலையும் காத்து, தங்கள் ஆரோக்கியத்தையும் பெறலாம், என கூறினார். -
வே.தூயவன், திருப்பூர்.