districts

img

அஞ்சல் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜூன் 25- அஞ்சல் துறை ஊழியர்கள், கோரிக் கைகளை வலியுறுத்தி ஈரோடு தலைமை  அஞ்சலகத்தில் புதனன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இந்திய  அஞ்சல் துறையில் ரூ.5,785 கோடி செலவில் ஐடி 2.0 என்ற பெயரில் கார்ப்பரேட் மயமாக்குவதை எதிர்த்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்  ஒருபகுதியாக ஈரோடு தலைமை அஞ்சலகத் தில் அனைத்து அஞ்சல் துறை சங்கங்கள் இணைந்து  நடத்திய ஆர்ப்பாட்டத்தை அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட தலைவர் சக்திவேல் மற்றும் தேசிய அஞ்சல் ஊழியர் சங்க செயலர் கணேசன் ஆகியோர் கூட்டு தலைமை ஏற்று நடத்தி னர். போராட்டத்தை வாழ்த்தி அகில இந் திய அஞ்சல் தபால்காரர் சங்க கோட்ட செய லர் கே.தனசேகர், அகில இந்திய கிராமப்புற  அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட செயலர் எம். சத்ருக்கன், ஈரோடு மாவட்ட மத்திய அரசு ஓய்வூதியர் சங்க செயலர் என்.ராமசாமி, அகில இந்திய அஞ்சல் ஆர்எம்எஸ் கிளை  தலைவர் சாமுவேல் சத்தியசீலன்,  கிராமப் புற அஞ்சல் ஊழியர் சங்க செயலர் கே.நடரா ஜன், தேசிய அஞ்சல் கிராமப்புற சங்க  செயலர் பி.ரவிக்குமார், ஈரோடு என்எப்பிஇ  மகிளா கமிட்டி திலகவதி, கிராம புற ஊழி யர் திவ்யா, ஈரோடு கோட்ட உதவி செயலர் ந.கார்த்திகேயன்  ஆகியோர் பேசினர். மத்திய அரசின், அஞ்சல் துறையின்  அடாவடித்தனத்தை எதிர்த்து கோட்ட உதவி தலைவர் அருண்குமார் முழக்கங்களை எழுப்பினார். அஞ்சல் துறையில் தனியார் மயமாக்குவதை தவிர்த்து, அஞ்சல் துறையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்பெடுத்த 5785 கோடி நிதியினை செலவு செய்து, இந்திய மக்களுக்கு தர மான அஞ்சல் துறை சேவையை உறுதிபடுத் தவேண்டுமென  கோரிக்கை வைக்கப்பட் டது. கூட்டத்தில் ஈரோடு நகர் பகுதி அஞ்சல கங்கள், கொடுமுடி, பள்ளிபாளையம், ஊத் துக்குளி, அரச்சலூர், வெள்ளோடு, சென்னி மலை ஆகிய பல பகுதிகளில் இருந்து ஏராள மானோர் பங்கேற்றனர். இறுதியாக ஈரோடு  கோட்ட அமைப்பு செயலர் மகேந்திரன் நன்றி கூறினார்.