திருப்பூர், பிப்.23- திருப்பூர் நியாயவிலைக் கடைகளில் கைரேகை பதிவு செய்யும் பி.ஒ.எஸ் கருவி சர்வர் பிரச்சனையை சரி செய்யாமல், மக்க ளிடம் கைரேகை பதியாமல் பொருட்களை பெறலாம் என தகவல் தெரிவித்து குழப்பம் விளைவிப்பதை எதிர்த்து, பி.ஒ.எஸ் கருவி ஒப்படைப்பு போராட்டம் நடத்தப் போவதாக சிஐடியு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் பா. கௌதமன் புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழ கம் முழுவதும் உள்ள நியாயவிலை கடைக ளில் தினமும் தொடரும் சர்வர் பிரச்சனை காரணமாக பொதுமக்கள் பொருட்களை பெற முடியாமலும், தினமும் அலைக்கழிப்பு செய்யப்படுவதாகவும், நியாயவிலைக் கடை பணியாளர் மீது புகார் தெரிவிக்கின்ற னர். உணவுத்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கைரேகை பதியாமல் பொருட்களை வழங்க கூடாது என்று வாய் மொழி உத்தரவு தெரிவித்துவிட்டு, எப் போது சென்றாலும் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று சுற்றறிக்கைகள் மூலம் உண்மைக்கு மாறான தகவல்களை வெளி யிடுகின்றனர். இதனால் பணியாளர்கள் மிகுந்த சிக்கலுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி, நியாயவிலை கடைகளில் என்ன செய்வது என்று அறியாமல் பரிதவித்து வரு கின்றனர். இந்தப் பரிதாப நிலைக்கு அரசு உடனடி யாக தீர்வு காண வேண்டும் என்று சிஐடியு சங் கத்தின் சார்பில் கோரிக்கை விடுத்தும், மாற்றுவழி தெரிவித்தும் அதற்கு எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் நியாய விலை கடையில் உள்ள பி ஓ எஸ் மெசினை மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் திருப்பி ஒப்படைக்கும் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற் படும் என்று திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணி யாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் கௌதமன் கூறியுள்ளார்.