திருப்பூர், ஜன. 14 - திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், நொய்யல் பண்பாட்டு அமைப்பு மற்றும் ஜீவநதி நொய்யல் சங்கம் இணைந்து நடத் தும் திருப்பூர் பொங்கல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கோலா கலமாக தொடங்குகிறது. உழைப்புக்கு பெயர் பெற்ற திருப்பூர் மாநகரில், உழவர்க ளைப் போற்றும் தமிழர்களின் உன்னத பண்டிகையான பொங் கல் திருவிழா, திருப்பூர் மக்களின் பண்பாட்டு திருவிழா வாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. நொய்யல் நாகரிகத்தின் அடையாளத்தைச் சுமந்தி ருக்கும் நொய்யல் நதிக்கரையில் யுனிவர்சல் திரையரங்கம் அருகே உள்ள மைதானத்தில் ஞாயிறன்று 25 பெண்கள் பொங் கல் பொங்கிட இந்த விழா தொடங்குகிறது. இந்த விழாவில் திருப்பூர் மக்கள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங் கேற்பார்கள் என்று விழா குழுவினர் எதிர்பார்க்கின்றனர். இந்த விழாவிற்காக பரந்து விரிந்த மைதானம் தூய்மை செய்யப்பட்டு அதன் அருகே இருக்கும் நொய்யல் ஆற்றங்கரை அழகுற ஓவியங்களால் மெருகூட்டப்பட்டி ருக்கிறது.
திருப்பூர் மாநகரத்தின் மையப் பகுதியில் அமைந்தி ருக்கும் இந்த இடம் நகருக்கே அழகு சேர்ப்பதாக உள் ளது. இந்த தொடக்க விழாவில் மாநில அமைச்சர்கள் நாடா ளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகர மேயர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், திருப்பூர் நகரின் தொழில் மற்றும் பண் பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். ஞாயிறு திங்கள் இரண்டு நாட்கள் ஏராளமான மண்ணிசை கலைஞர்களின் கலைகள் அரங்கேறுகின்றன. மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமை அந்த இடத்தில் 3000 பேர் பங் கேற்று பொங்கல் வைக்கின்றனர். மாநகராட்சி நிர்வாகமும், நொய்யல் பண்பாட்டு அமைப் பும் இந்த விழா குறித்த செய்திகளை ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும், பொதுவெளிகளிலும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து இருக்கின்றனர். உழைப்புக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் பெயர் பெற்ற திருப்பூரின் பாரம்பரிய பண்பாட்டை பறைசாற்றும் வகையில் இந்த மக்கள் திருவிழா நடைபெறுகிறது. எதிர்காலத்தில் திருப்பூரின் முக்கியமான அடையாளங்க ளில் ஒன்றாக இந்த விழாவை தொடர்ந்து முன்னெடுக்க இருப்பதாக நொய்யல் பண்பாட்டு அமைப்பினர் தெரிவித் தனர். நொய்யல் ஆற்றங்கரை ஓவியம் படம் வைக்கவும்.