கோவை, ஜன.16- ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட, உலாந்தி வனசரகம் டாப்சிலிப் கோழி கமுத்தி யானைகள் முகாமில், வனத்து றையினரால் 26 யானைகள் பராமரிக் கப்பட்டு வருகிறது. வனத்திற்கும், வனத்துறையினரின் பல்வேறு பணிக ளுக்கும் உதவியாக இருக்கும் யானை களுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டு தோறும் யானைப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு கோழிகமுத்தி யானைகள் முகாமில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த பொங்கல் விழாவுக்கு, காலை முதலே யானைகளை குளிப் பாட்டி, அலங்காரம் செய்யப்பட்டு மரி யாதை செய்யப்பட்டது. இதனைத்தொ டர்ந்து, மலைவாழ் மக்கள், பாரம்பரிய முறைப்பட்டி மண்பானையில் பொங் கல் வைத்து வழிபட்டனர். பின்னர் யானைகளுக்கு பிடித்த உணவான கரும்பு, வாழை, கொள்ளு, ராகி, அரிசி சாதம் உள்ளிட்ட உணவுகள் வழங்கப் பட்டது. இந்த யானை பொங்கல் விழாவை ஏராளமான சுற்றுலா பயணி கள் கண்டு ரசித்தனர்.