நாமக்கல், அக்.3- நாமக்கல் அருகே சாய கழிவுநீரை சுத்தி கரிப்பு செய்யப்படாமல் வெளியேற்றப்படு வதாக புகாரின் அடிப்படையில், மாசு கட்டுப் பாட்டு அதிகாரிகள் இரவு நேரத்தில் ஆய்வு மேற்கொண்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் ஏராளமான சாயப்பட்டறைகள் இயங்கி வருகிறது. இந்த சாயப்பட்டறைகள் இரவு நேரத்தில் சுத்தி கரிப்பு செய்யப்படாமல் கழிவு நீர் வெளியேற் றப்படுவதாக புகார்கள் வந்த நிலையில், இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகார்கள் சென்றது . மேலும், பகல் முழுவதும் சாயப்பட்டறை களில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் தேக்கி வைக்கப்பட்டு, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் நேரடியாக காவிரி ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் கள் குணசேகரன், சந்தானகிருஷ்ணன் ஆகி யோர் கடந்த இரண்டு தினங்களாக இரவு நேரத்தில் சமையல் சங்கிலி, ஆவத்தி பாளையம், பள்ளி பாளையம் காவிரி பாலம் உள்ளிட்ட பகுதிகளில் வெளியேறும் கழிவு நீரை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் மொத்தமாக 15 இடங்களில் கழிவு களின் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து இரவு நேரங்களில் சாய கழிவு நீர் வெளியேற்றப் படுவது கண்காணிக்கபட்டு வருகிறது. இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் புகார் செய்யப்பட்டுள்ளது . கழிவுநீரை வெளியேற்றும் சாயப் பட்டறை உரிமையாளர் மீது உரிய நடவ டிக்கை எடுக்கப்படும்.மேலும், சாயச்சாலை களின் மின் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ள தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.