கோவை, நவ.18- நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், கோவையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்பாடி ஆய்வு மேற்கொண்டார். 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத் தும் பணி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி சனி யன்று, கோவை ஜிசிடி பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆட்சியர் ஆய்வு மேற்கொண் டார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் சர்மிளா, மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாநகராட்சி அதி காரிகள், காவல்துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆட்சியர் பேசு கையில், வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு சுருக்கத் திருத்தம் டிசம்பர் 9ஆம் தேதி வரை நடைபெறும். இரண்டா வது சிறப்பு முகாம் வருகின்ற 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதுவரை 58,558 மனுக்கள் பெறப் பட்டுள்ளது. மனுக்களை உடனடியாக பரிசீலிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கோவை மாவட்ட மக்கள் தொகை அடிப்படையில் 18 லிருந்து 19 வயதிற்குட்பட்ட வாக்காளர்கள் ஒன்றரை லட்சத்துக்கும் மேலாக இருக்க வேண்டும். ஆனால், தற்போது 15 ஆயிரத்திலிருந்து 16 ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் வலிமையான வாக்குரிமையை உணர்ந்து அனைத்து இளைஞர்களும் வாக் களிக்க முன்வர வேண்டும். இந்த சிறப்பு முகாம்களை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகாம் களுக்கு வர இயலாதவர்கள் இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் வாரங்களில் அனைத்து கல்லூரிகளிலும், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இளம் வாக்காளர்களை சேர்ப்ப தற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது. புதிய வாக்காளர்கள் சேர்ப்புக்கு பின் மாணவர்கள் சார்ந்துள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் அடிப்படையில் பட்டியல் அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது என்றார். முன்னதாக, கோவை மாவட்டத்தில் இரண்டு நாடாளு மன்ற தேர்தலுக்கு இரண்டு இடங்களில் ஆய்வுப் பணி மேற் கொள்ளப்பட்டது. கோவை தடாகம் சாலையில் உள்ள ஜிசிடி பொறியியல் கல்லூரி மற்றும் பொள்ளாச்சி நாச்சிமுத்து மகாலிங்கம் கல்லூரியிலும் ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் வாக்குச்சாவடி பெட்டிகள் வைக்கப்படக்கூடிய ஸ்ட்ராங் ரூம், பதிவு செய்த பெட்டி கள் வைக்கக்கூடிய ரூம் என அனைத்தும் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.