உடுமலை, மே 25- கோவை - பொள்ளாச்சி பயணிகள் ரயிலை ஆயிரக்கணக்கானோர் பய னடையும் வகையில் திண்டுக்கல் வரை நீட்டித்து இயக்குவதற்கு தென்னக ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்படி உடுமலைபேட்டையைச் சேர்ந்த தென்னக ரயில்வே மதுரைக் கோட்ட பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் எஸ்.சண்முகசுந்தரம் கோரியுள்ளார். இதுகுறித்து, அவர் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப் பதாவது, சென்னையில் இருந்து மதுரை செல்லும் பாண்டியன் விரைவு ரயிலில் அதிகாலை 4 மணியளவில் திண்டுக்கல்லுக்கு வரும் பயணிகள் குறிப்பாக, பக்தர்கள் பழனிக்குச் செல்வதற்கு அங்கிருந்து பேருந்தில் பயணிக்க வேண்டியுள்ளது. ஏராளமா னோர் இதுபோல் தினமும் பயணம் செய்கின்றனர். அதேபோல் பழனியில் இருந்து மடத்துக்குளம், உடுமலை, பொள்ளாச்சி, கோவை வரை ஆயிரக் கணக்கானோர் தினமும் வேலைக்குச் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், கோவையில் இருந்து பொள்ளாச்சி வரை இயக்கப் படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06419) இரவு 7.30 மணிக்கு பொள் ளாச்சி நிலையத்துக்கு வருகிறது. அதன் பிறகு அங்கேயே நிறுத்தி வைக் கப்பட்டு இருக்கிறது. மறு நாள் காலை 7.30 மணிக்கு இதே ரயில் (06420) பொள் ளாச்சி நிலையத்தில் இருந்து கோவைக்கு புறப்பட்டுச் செல்கிறது. எனவே, பொள்ளாச்சியில் இருந்து இயக்கப்படும் 06420 ரயிலை அதி காலை 4.30 மணிக்கு திண்டுக்கல் லில் இருந்து புறப்பட்டு ஒட்டன்சத்தி ரம், பழனி, மடத்துக்குளம், உடுமலை வழியாக 7.30 மணிக்கு பொள்ளாச் சிக்கு வந்து அங்கிருந்து கோவைக்கு செல்வது போல மாற்றினால் ஆயிரக் கணக்கான அன்றாட பயணம் செய்யும் பயணிகளும், சென்னையில் இருந்து வரும் பழனி கோயில் பக்தர்களும் பய னடைவார்கள். எனவே, குறைவான பயன்பாட்டில் இருக்கும் கோவை - பொள்ளாச்சி பயணிகள் சிறப்பு ரயிலை பழனி வழி யாக திண்டுக்கல் வரை இயக்கி னால் சென்னையில் இருந்து சேலம், கோவை வழியாக கேரளா செல்லும் வழித்தடத்தையும், சென்னையில் இருந்து திருச்சி, திண்டுக்கல், திரு நெல்வேலி, மதுரை வழியாக கன்னி யாகுமரி செல்லும் வழித்தடத்தையும் இணைக்கக் கூடியதாக இந்த ரயில் அமையும். இதனால், ஏராளமான பய ணிகள் பயனடைவார்கள். ரயில்வே நிர்வாகத்துக்கும் வருவாய் கூடும். எனவே, முதல்கட்டமாக பொள் ளாச்சியில் இருந்து பழனி வரை இந்த ரயிலை இயக்குவதற்கு உடனடியாக டவடிக்கை எடுக்க வேண்டும், ரயில்வே இருப்புப் பாதை பணி நிறை வடைந்தவுடன் திண்டுக்கல் வரை நீட் டிக்க ஆவன செய்ய வேண்டும் என்று எஸ்.சண்முகசுந்தரம் கேட்டுக் கொண் டுள்ளார்.