districts

img

குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தில் பொள்ளாச்சி நகராட்சி தலைவர் ஆய்வு

பொள்ளாச்சி, ஏப்.22- பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் ஒருவார கால மாக குடிநீர் வழக்கத்திற்கு மாறாக சுவை மாறியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததையடுத்து, அம்பராம் பாளையத்திலுள்ள குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தில் நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் வியாழனன்று ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு அம்பராம்பாளையம் கூட்டுக்கு டிநீர் திட்டத்தின் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36  வார்டுகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும் பத்தினர் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரகாலமாக நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் விநியோ கிக்கப்படும் குடிநீரின் சுவை வழக்கத்திற்கு மாறாக உள்ள தாக பொதுமக்கள் நகராட்சிக்கு புகார் தெரிவித்தனர். இதை யடுத்து வியாழனன்று பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியா மளா நவநீதகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் எஸ். தாணுமூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் ஆய்வு மேற் கொண்டனர். இதன்பின் சியாமளா நவநீதகிருஷ்ணன் கூறுகையில், ஆழியாறு ஆற்றில் அதிகளவு பாலாறு நீர் கலப்பதால் சுவை  மாறியுள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் மற்றும்  உதவிபொறியாளரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட் டது. அதில், வழக்கமாக ஆழியாறு ஆற்றில் தண்ணீர் எடுக் கும் இடத்திலிருந்து, சுமார் 200 மீட்டர் தொலைவில் இடது பக்க கரையோரமாக கிணறு அமைத்து, அதிலிருந்து சுத்தி கரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் எடுத்து பொதுமக்களுக்கு விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.